Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal – நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்

Naan Nadanthu Vantha Pathaigal Karadu Medugal
நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள் (2)

நடக்க முடியல டாடி நடக்க முடியல – என்னை
தாங்கிக் கொள்ளுங்க கரத்தில் ஏந்திக் கொள்ளுங்க

என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன் ஓட முடியல
என் மன பெலத்தால் நடந்து பார்த்தேன் நடக்க முடியல
என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன் சுமக்க முடியல
என் கால் பெலத்தால் கடந்து பார்த்தேன் கடக்க முடியல — நடக்க

என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன் ஆள முடியல
என் பண பெலத்தால் படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
என் சொல் பலத்தால் சாதிக்கப் பார்த்தேன் ஒன்றும் முடியல
என் வாய் பெலத்தால் வாழ பார்த்தேன் வாழ முடியல — நடக்க

Karthave En Belane – கர்த்தாவே என் பெலனே

Karthave En Belane
கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன்
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர்

1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும்
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப
உருக்கமாய் வந்து உதவி செய்தார்

2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர்
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ
புதிய கிருபையின் உறைவிடமே

3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன்
சதா காலமும் ஜெயம் எடுப்பேன்

4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும்
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை
அவரே எந்தன் கன்மலையே

5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி
நீதியின் சால்வையை எனக்குத் தந்து
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார்

Arpanithen Ennai – அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

Arpanithen Ennai Muttrilumaai
1. அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே – எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே

2. என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்

3. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்

4. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த ஈவு வரங்கள் யாவும்
உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்

Parama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

Parama Alaipin Pandhaya
பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2

1. இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

3. என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

4. என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்

Ummai Pola Nalla Devan – உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே

Ummai Pola Nalla Devan
உம்மை போல நல்ல தேவன் யாரும் இல்லையே
உம்மை போல வல்ல தேவன் யாரும் இல்லையே (2)

உம்மை போல என்னை காத்திட
உம்மை போல என்னை தாங்கிட
உம்மை போல என்னை நடத்திட

யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே (2)

உம்மை நான் போற்றுகிறேன் …
உம்மை நான் வாழ்த்துகிறேன் …
உம்மை நான் வணங்குகிறேன் …
என் தெய்வமே என் இயேசுவே (2)
என் தெய்வமே என் இயேசுவே (3)

உம்மை போல என்னை நிரப்பிட
உம்மை போல என்னை தேற்றிட
உம்மை போல என்னை அனைத்திட

யாரும் இல்லையே
ஏசையா யாரும் இல்லையே (2)

உம்மை நான் போற்றுகிறேன் …
உம்மை நான் வாழ்த்துகிறேன் …
உம்மை நான் வணங்குகிறேன் …
என் தெய்வமே என் இயேசுவே (2)
என் தெய்வமே என் இயேசுவே (3)

Ummai poala nalla dhaevan Yaarum illaiyae
Ummai poala valla dhaevan Yaarum illaiyae (2)

Ummai poala ennai kaatthida
Ummai poala ennai thaangida
Ummai poala ennai nadatthida

Yaarum illaiyae
Dhaevaa yaarum illaiyae (2)

Ummai naan poatrugiraen
Ummai naan vaazhtthugiraen
Ummai naan vanangugiraen
En dheivamae En yaesuvae (2)
En dheivamae En yaesuvae (2)

Ummai poala ennai nirappida
Ummai poala ennai thraetrida
Ummai poala ennai anaitthida

Yaarum illaiyae
Dhaevaa yaarum illaiyae (2)

Ummai naan poatrugiraen
Ummai naan vaazhtthugiraen
Ummai naan vanangugiraen
En dheivamae En yaesuvae (2)
En dheivamae En yaesuvae (2)

In English Version

There is no one like you Oh Lord
No one like you Lord (4)
There is no one To Save me Lord

There is no one To Take me Lord
There is no one To Heel me Lord
I praise your Holy name,Mighty Name,Precious name…Oh my lord!(2)
I praise your Holy name,Mighty Name,Precious name…Oh my lord!…Oh my God!
There is none like You
None Like you(2)

Unnatha Devan Unnudan Irukka – உன்னத தேவன் உன்னுடன் இருக்க

Unnatha Devan Unnudan Irukka
உன்னத தேவன் உன்னுடன் இருக்க
உள்ளமே கலங்காதே
அவர் நல்லவரே என்றும் வல்லவரே
நன்மைகள் குறையாதே

பாவத்தில் இருந்த உன்னை
பரிசுத்தமாக்கினாரே
தாழ்மையில் கிடந்த உன்னை
தம் தயவால் தூக்கினாரே – உன்னத

அந்நாளில் தம் பாதம்
அமர்ந்த அந்நாளின் ஜெபம் கேட்டார்
அனாதையாய் திரிந்த
அந்த ஆகாரின் ஜெபம் கேட்டார் – உன்னத

இயேசு உன் முன் நடந்தால்
நீ யோர்தானைக் கடந்திடலாம்
விசுவாசம் உனக்கிருந்தால்
அந்த எரிகோவைத் தகர்த்திடலாம் – உன்னத

Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே

Karthavin Janame
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
பல்லவி

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு!
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு!
அல்லேலூயா! அல்லேலூயா! (2)
சரணங்கள்

1. பாவத்தின் சுமையகற்றி — கொடும்
பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மைக் கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

2. நீதியின் பாதையிலே — அவர்
நிதம் நம்மை நடத்துகின்றார்!
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வைத் தருகின்றாரே அல்லேலூயா (2) — கர்த்தாவின்

3. மறுமையின் வாழ்வினிலே — இயேசு
மன்னவன் பாதத்திலே
பசிதாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம்! அல்லேலூயா (2) — கர்த்தாவின்

Karthavin Janame Kaithaalamudanae

Pallavi

Karththaavin Janamae Kaiththaalamudanae
Kalikoornthu Geetham Paadu!
Saalaemin Raajaa Nam Sonthamaanaar
Sangeetham Paati Aadu!
Alleluia! Alleluia! (2)

Saranangal

1. Paavaththin Sumaiyakatti — Kodum
Paathaala Vali Vilakki
Parivaaka Nammai Karam Neetti Kaaththa
Parisutha Dhaevan Avarae Allaelooyaa (2) — Karthaavin

2. Neethiyin Paathaiyilae — Avar
Nitham Nammai Nadathukintar!
Ethu Vantha Pothum Maaraatha Inba
Puthu Vaalvai Tharukintarae
Alleluia (2) — Karthaavin

3. Marumaiyin Vaalvinilae — Yesu
Mannavan Paathathilae
Pasithaakamindri Thuthi Kaanam Paadi
Paranodu Nitham Vaaluvom!
Alleluia (2) — Karthaavin

Hallelujah Kartharaiye – அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

Hallelujah Kartharaiye

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

ராஜாதி ராஜனாம் இயேசுராஜன் பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா தேவனைத் துதியுங்கள்

1. தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்ததினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள் (…ராஜாதி)

2. சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள் (…ராஜாதி)

3. பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள் (…ராஜாதி)

4. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை பரிசுத்தர்கள் நிரப்புவார் துதியுங்கள் (…ராஜாதி)

Alleluyaa Karththaraiye Yekamaayth Thuthiyungal
Avar Nadaththum Seyalkalellaam Paarththore Thuthiyungal
Vallamaiyaay Kiriyai Seyyum Valloraith Thuthiyungal
Elloraiyum Yettrukkollum Yesuvaith Thuthiyungal

Raajaathi Raajanaam Yesuraajan Boomiyil Aatchi Seyvaar
Alleluyaa Alleluyaa Thevanaith Thuthiyungal

1. Thampurodum Veenaiyodum Karththaraith Thuthiyungal
Raththaththinaal Paavangalaip Pokkinaar Thuthiyungal
Ekkaalamum Kaiththaalamum Muzhangidath Thuthiyungal
Ekkaalamum Maaraathavar Yesuvaith Thuthiyungal (…Raajaathi)

2. Sooriyane Santhirane Thevanaith Thuthiyungal
Oliyathanai Engal Ullam Aliththoraith Thuthiyungal
Akkiniye Kalmazhaiye Padaiththoraith Thuthiyungal
Akkiniyaay Kalmanathai Udaipporaith Thuthiyungal (…Raajaathi)

3. Pillaikale Vaalipare Thevanaith Thuthiyungal
Vaazhvathanai Avar Pannikke Koduththu Neer Thuthiyungal
Periyavare Prabukkale Thevanaith Thuthiyungal
Selvangalai Yesuvukkaay Seluththiye Thuthiyungal (…Raajaathi)

4. Aazhkadale Samuththirame Thevanaith Thuthiyungal
Alai Alaiyaay Ooliyarkal Elumbinaar Thuthiyungal
Thootharkale Munnodikale Thevanaith Thuthiyungal
Paralokaththai Parisuththarkal Nirappuvaar Thuthiyungal (…Raajaathi)

Nandriyal Padiduvom – நன்றியால் பாடிடுவோம்

Nandriyal Padiduvom
நன்றியால் பாடிடுவோம்
நல்லவர் இயேசு நல்கிய எல்லா
நன்மைகளை நினைத்தே

1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த
எங்கள் தேவனின் கரமே
தாங்கியே இந்நாள் வரையும்
தயவாய் மா தயவாய் – ஆ (2)

2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை
உடன் சுதந்திரராய் இருக்க
கிருபையின் மகா தானமது வருங்
காலங்களில் விளங்க – ஆ (2)

3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும்
சேவையில் மரித்தார்
சேர்ந்து வந்து சேவை புரிந்து
சோர்ந்திடாது நிற்போம் – ஆ (2)

4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே
சத்ருக்களாயினாரே
சத்தியத்தை சார்ந்து தேவ
சித்தம் செய்திடுவோம் – ஆ (2)

5. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மா பெருங் கிருபை மா நிலத்தோர்க் கீந்தாரேசு சுவிசேஷ ஒளியால் – ஆ (2)

6. அழைக்கப்பட்டோரே நீர் – உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லாத் திரு ஆக்கமிதனை அவனியோர் வாக்களிப்பீர் – ஆ (2)

7. சீயோனைப் பணிந்துமே
கிறிஸ்தேசு ராஜனாய் சீக்கிரம் வருவ சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் ராஜனையே – ஆ

Nandriyaal Paadiduvoam
Nallavar Yaesu Nalgiya Ellaa
Nanmaigalai Ninaithae

1. Sengadal Thanai Naduvaai Piritha
Engal Dhaevanin Karamae
Thaangiyadhae Innaal Varaiyum
Dhayavaai Maa Dhayavaai – Aa (2)

2. Uyirpithae Uyarthinaar Unnadham Varai
Udan Sudhandhiraraai Irukka
Kirubaiyin Magaa Dhaanamadhu Varung
Kaalangalil Vilanga – Aa (2)

3. Jeevanai Thiyaagamaai Vaitha Palar Kadum
Saevaiyil Maarithaar
Saerndhu Vandhu Saevai Purindhu
Soarndhidaadhu Nirpoam – Aa (2)

4. Mithrukkalaana Palar Nandriyizhandhae
Sathrukkalaayinaarae
Sathiyathai Saarndhu Dhaeva
Sitham Seidhiduvaom – Aa (2)

5. Manarathai Neekkiyae Jeevanai Aruliya
Maa Perung Kirubai
Maa Nilathoarkkeendhaar Yaesu
Suvisaesha Oliyaal – Aa (2)

6. Azhaikkapattoarae Neer Unnadha Azhaippinai
Arindhae Vandhiduveer
Alavillaa Thiru Aakkamithanai
Avanaiyaarkalippeer – Aa (2)

7. Seeyoanai Panindhumae Kiristhaesu Raajanaai
Seekkiram Varuvaar
Sindhai Vaippoam Sandhikkavae
Seeyoanin Raajanaiyae – Aa (2)

Thudippade Enn Thaguthiyallo – துதிப்பதே என் தகுதியல்லோ

Thudippade Enn Thaguthiyallo
துதிப்பதே என் தகுதியல்லோ
துதித்திடுவேன் என் இயேசுவை

வேதம் நிறைந்த இதயம் தந்தார்
ஜெபம் நிறைந்த நேரம் தந்தார்
கண்ணீர் நிறைந்த கண்கள் தந்தார்
கருணை நிறைந்த கரங்கள் தந்தார் – துதிப்பதே

வியாதி நேரத்தில் வல்லமை தந்தார்
சோதனை நேரத்தில் ஜெயம் தந்தார்
கைவிட்ட நேரத்தில் ஜீவன் தந்தார்
ஆரோக்கிய நேரத்தில் அடக்கம் தந்தார் – துதிப்பதே

மனதில் நிறைந்த மகிழ்ச்சி தந்தார்
பார்வை நிறைந்த தூய்மை தந்தார்
சிந்தனை நிறைந்த ஊழியம் தந்தார்
செயல் நிறைந்த திட்டங்கள் தந்தார் – துதிப்பதே

ஆபத்து நேரத்தில் அடைக்கலம் தந்தார்
பெலவீன நேரத்தில் பெலன் தந்தார்
செய்தி நேரத்தில் தூது தந்தார்
பாடிய நேரத்தில் பரவசம் தந்தார் – துதிப்பதே

வளம் நிறைந்த வாழ்வு தந்தார்
மகிமை நிறைந்த தாழ்மை தந்தார்
அன்பு நிறைந்த ஆட்கள் தந்தார்
ஆவி நிறைந்த அறிவு தந்தார் – துதிப்பதே

சாட்சி நிறைந்த ஜீவியம் தந்தார்
சத்தியம் நிறைந்த சபை தந்தார்
இயேசுவில் நிறைந்த ஞானம் தந்தார்
ஒழி நிறைந்த வழி திறந்தார் – துதிப்பதே