Kavalai Kollathirungal
கவலை கொள்ளாதிருங்கள்
உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்-என்று
1. பறக்கும் பறவைகள் பாருங்கள்
விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை
பரமபிதா ஊட்டுகிறார்
மறப்பாரோ மகனே (ளே)
2. கவலைப்படுவதினால்
நமது உயரத்திலே
ஒரு முழம் கூட்ட முடியுமா
புதுபெலன் பெறவும் கூடுமா
3. நாளை தினம் குறித்து
நம்பிக்கை இழக்காதே
நாளைக்கு வழி பிறக்கும் – நீ
இன்றைக்கு நன்றி சொல்லு
4. தகப்பனின் விருப்பத்தையும்
அவரது ஆட்சியையும்
தேடுவோம் முதலாவது -நம்
தேவைகளை சந்திப்பார் – உயிர் வாழ
5. காட்டு மலர்கள் கவனியுங்கள்
உழைப்பதில்லை, நூற்பதில்லை
உடுத்துகிறார் நம் தகப்பன்
உனக்கு அவர் அதிகம் செய்வார் – உயிர்வாழ
Amarndhirupaen Aruginilae – அமர்ந்திருப்பேன்
Amarndhirupaen Aruginilae
அமர்ந்திருப்பேன் அருகினிலே
சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே
இயேசய்யா என் நேசரே
அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்
நேசிக்கிறேன் உம்மைத்தானே
நினைவெல்லாம் நீர்தானய்யா
துதிபாடி மகிழ்ந்திருப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்
Amarndhirupaen aruginilae
Saaindhirupaen um thoalinilae
Yaesayyaa en naesarae
Anbu koorndheer jeevan thandheer
Naesikkiraen ummaiththaanae
Ninaivellaam neerthaanaiyaa
Thudhipaadi magizhndhirupaen
Uyirulla naalellaam
Anbu Kuruven Innum Athigamai – அன்பு கூறுவேன்
Anbu Kuruven Innum Athigamai
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
1. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை
2. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா
3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா
Anbu kooruvaen innum adhigamai
Aaraadhipaen innum aaravamaai
Muzhu ullathoadu aaraadhipaen
Muzhu belathoadu anbu Kooruvaen
Aaradhanai Aaradhanai
1.Ebinaesarae ebinaesarae
Idhuvaraiyil udhavineerae – Ummai
2.Elroyee elroyee
Ennai kandeerae nandri aiyaa – Ummai
3.Yehova rapha Yehova rapha
Sugam thandheerae nandri aiyaa – Ummai
Ummaiyae Naan Neseipaen – உம்மையே
Ummaiyae Naan Neseipaen
உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா – உம்
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன்
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதி
தாக்கினாலும் அசைக்கப்படுவதில்லை
Neethiyil Nilaaithirunthu – நீதியில் நிலைத்திருந்து
Neethiyil Nilaaithirunthu
நீதியில் நிலைத்திருந்து – உம்
திருமுகம் நான் காண்பேன்
உயிர்தெழும் போது -உம்
சாயலால் திருப்தியாவேன் -நீதியில்
1. தேவனே, நீர் என் தேவன்
அதிகாலமே தேடி வந்தேன்
நீரின்றி வறண்ட நிலம்போல்
ஏங்குகிறேன் தினம் உமக்காய்
அல்லேலூயா ஓசான்னா
2. ஜீவனை விட உம் அன்பு
அது எத்தனை நல்லது
புகழ்ந்திடுமே, என் உதடு
மகிழ்ந்திடுமே, என் உள்ளம்
3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்லி துதிப்பேன்
அறுசுவை உண்பது போல
திருப்தியாகும் என் ஆன்மா
4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
துணையாளரே, உம் நிழலை
தொடர்ந்து, நடந்து வளர்வேன்.
Yen Valvin Muloo Yekamellam – என் வாழ்வின் முழு
Yen Valvin Muloo Yekamellam
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் – 2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே நான் உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா – 4
1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்புகழ் பாடி மகிழ்வதுதான்-2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி
மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
2. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வது தான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான்
நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
3. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான்-2
இரவும் பகலும் உம்சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம்சித்தம்
செய்திடுவேன்
எப்போதுமே உம்சித்தம் செய்திடுவேன்
Ummunae Yepothum Neraivaana Magilchiundu – உம்முன்னே
Ummunae Yepothum Neraivaana
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே
1. என்னை காக்கும் இறைவன் நீரே
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
என்னையாளும் தலைவர் நீரே
உம்மையன்றி ஆசை வேறுயில்லை
என்னைக் காக்கும் இறைவன் நீரே
அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
2. எனக்குரிய பங்கும் நீரே
பரம்பரை சொத்தும் நீரே
ஆலோசனை தரும் தகப்பனே
இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே
பரம்பரை சொத்து நீரே
3. எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால்
அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்;தியுள்ளேன்
4. என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
ஜீவனே, உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது
என் உடலும் இளைப்பாறுது
Andavar Allugai Seikirar – ஆண்டவர் ஆளுகை
Andavar Allugai Seikirar
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்
1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே திருமுன்
வாருங்கள்
2. எக்காள தொனி முழங்க இப்போது
துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
துதியுங்கள்
3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
நுழையுங்கள்
அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
பலியிடுங்கள்
4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
துதியுங்கள்
Paaduvoom Magilvoom Kondaduvom – பாடுவோம் மகிழ்வோம்
Paaduvoom Magilvoom Kondaduvom
பாடுவோம் மகிழ்வோம் கொண்டாடுவோம்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவோம்
1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே – நன்றி
2. துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்கும் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
என் பிரியமும் நீர்தானையா
3. கல்வாரி சிலுவையினால் -என்
சாபங்கள் உடைந்ததையா
ஆப்ரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்கு கிடைத்ததையா
4. இயேசுவே உம் இரத்ததால்
என்னை நீதிமானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து -உம்
அன்பை ஊற்றினீரே
5. உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் -என்
உயிரான கிறிஸ்து வந்ததால் -உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
Ummai Pugalinthu Paaduvathu Nallathu – உம்மைப் புகழ்ந்து
Ummai Pugalinthu Paaduvathu Nallathu
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது
அது இனிமையானது ஏற்புடையது
1. பாடல்கள் வைத்திர் ஐயா
பாலகர் நாவிலே
எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க
இவ்வாறு செய்தீரய்யா
உந்தன் திருநாமம் – அது
எவ்வளவு உயர்ந்தது – 2
2. நிலாவை பார்க்கும்போது
விண்மீன்கள் நோக்கும்போது
என்னை நினைத்து விசாரித்து
நடத்த நான் எம்மாத்திரமையா
3. வானதூதனை விட சற்று
சிறியவனாய் படைத்துள்ளீர்
மகிமை மாட்சிமை மிகுந்த
மேன்மையாய் முடிசூட்டி நடத்துகிறீர்
4. அனைத்துப் படைப்புகள் மேல்
அதிகாரம் தந்துள்ளீர்
காட்டு விலங்குகள் மீன்கள்
பறவைகள் கீழ்படியச் சொன்னீர்