Ummai Nambi Unthan – உம்மை நம்பி உந்தன்

Ummai Nambi Unthan
உம்மை நம்பி உந்தன் பாதம்
உறுதியாய்ப் பற்றிக் கொண்டோம்
ஒருபோதும் கைவிடமாட்டீர் – 2

1. கண்ணீரைத் துடைத்து
கரங்களைப் பிடித்து
காலமெல்லம் காத்துக் கொண்டீர்
2. மகனாக மகளாக
அப்பா என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தீர்
3. அச்சாரமாய் முத்திரையாய்
அபிஷேக வல்லமையை
அடிமைக்குத் தந்தீரே
4. குருடர்கள் பார்த்தார்கள்
செவிடர்கள் கேட்டார்கள்
முடவர்கள் நடந்தார்கள்

Magimai Umakkandro – மகிமை உமக்கன்றோ

Magimai Umakkandro
மகிமை உமக்கன்றோ
மாட்சிமை உமக்கன்றோ
துதியும் புகழும் ஸ்தோத்திரமும்
தூயவர் உமக்கன்றோ
ஆராதனை ஆராதனை – என்
அன்பர் இயேசுவுக்கே
1. விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தீர்
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்
2. வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிஷேக நாதரே
3. எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக
4. உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தீபமன்றோ

In English

Magimai Umakkandro
Maatchimai Umakkandro
Thuthiyum pugalum sthothiramum
Thooyavar umakkandro – en
Ambar yesuvuke

1. Vilaiyerappetta um raththathal
Viduthalai kodutheer
Rajakkalaaga leviyaaraga
Umakkena therinthu kondeer

2. Valikattum theepam thunaiyaalare
Thettrum theivame
Anbaal belaththal
Anal moottum iyaa abisheka naathare

3. Eppothum irukindra
Inimelum varugindra engal rajave
Um naamam vaalga um arase varuga
Um siththam niraiveruga

4. Um valla seyalgal
Migavum periyaa adhisayamandro
Um thooya valigal nermayaana
Saththiyaa theepamandro

Naan Yesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை

Naan Yesuvin Pillai
நான் இயேசுவின் பிள்ளை பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே

1. தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்

2. கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன்

3. வென்றுவிட்டேன் வென்றுவிட்டேன்
எதிரியின் தடைகளை வென்றுவிட்டேன்

4. நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன்

5. சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன்

6. முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன்

Pothagar Vanthu Vittar – போதகர் வந்து விட்டார்

Pothagar Vanthu Vittar
போதகர் வந்துவிட்டார்
உன்னைத் தான் அழைக்கிறார்
எழுந்து வா (4)
1. கண்ணீர் கடலில் மூழ்கி
கலங்கி தவிக்கிறாயோ
கலங்காதே திகையாதே
கர்த்தர் உன் அடைக்கலம் – மகனே
2. பாவச்சேற்றில் மூழ்கி
பயந்து சாகிறாயோ
தேவமைந்தன் தேடுகிறார்
தேற்றிட அழைக்கிறார் மகனே
3. கல்வாரி சிலுவையைப் பார்
கதறும் இயேசுவைப் பார்
உன் பாடுகள் ஏற்றுக் கொண்டார்
உன் துக்க சுமந்து கொண்டார்
4. துன்பம் துயரம் உன்னை
சோர்வுக்குள் ஆக்கியதோ
அன்பர் இயேசு அழைக்கிறார்
அணைக்கத் துடிக்கிறார்

Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன்

Kartharaiye Thuthippen
கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்
1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்
2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்
3. எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்
4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவும் பாவம் என்னை
அணுகமுடியாது
5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்

Ethanai Nanmaigal Enakku – எத்தனை நன்மைகள்

Ethanai Nanmaigal Enakku
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன் நான்

நன்றி ராஜா… நன்றி ராஜா…

1. தாழ்மையில் இருந்தேன் தயவாய் நினைத்தீர்
தேவனே உம்மை துதிப்பேன்

2. பெலவீனன் என்று தள்ளி விடாமல்
பெலத்தால் இடை கட்டினீர்

3. பாவத்தினாலே மரித்துப் போய் இருந்தேன்
கிருபையால் இரட்சித்தீரே

4. எனக்காக மரித்தீர் எனக்காக உயிர்த்தீர்
எனக்காய் மீண்டும் வருவீர்

5. கரங்களைப் பிடித்து கண்மணி போல
காலமெல்லாம் காத்தீர்

6. பாவங்கள் போக்கி சாபங்கள் நீக்கி
பூரண சுகமாக்கினீர்

7. முள்முடி தாங்கி திரு இரத்தம் சிந்தி
சாத்தானை ஜெயித்து விட்டீர்

8. நீர் செய்த அதிசயம் ஆயிரம் உண்டு
விவரிக்க முடியாதையா

Etthanai nanmaigal enakku seidheer
Eppadi nandri solvaen – naan

Nandri raajaa nandri raajaa

1. Thaazhmaiyil irundhaen
Dhayavaai ninaitheer
Dhaevane ummai thudhippaen

2. Belaveenan endru
Thalli vidaamal
Belathaal idai kattineer

3. Paavathinaalae marithu
Poai irundhaen
Kirubaiyaal ratchitheerae

4. Enakkaaga maritheer
Enakkaaga uyirtheer
Enakkaai meendum varuveer

5. Karangalai pidithu
Kanmani poala
Kaalamellaam kaatheer

6. Paavangal poakki
Saabangal neekki
Poorana sugamaakkineer

7. Mulmudi thaangi
Thiru rattham sindhi
Saathaanai jeyithu vitteer

8. Neer seidha adhisayam
Aayiram undu
Vivarikka mudiyaadhaiyaa

Aaruthalin Deivame – ஆறுதலின் தெய்வமே

Aaruthalin Deivame
ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது
1. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும்
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்
2. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள்
தூய மனதுடன் துதிப்பார்கள்
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்
3. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள்
ஓடினாலும் களைப்படையார்
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்
4. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள்
வல்லமை மேலே வல்லமை கொண்டு
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்
5. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின்
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

Payapadamaten Naan – பயப்படமாட்டேன் நான்

Payapadamaten Naan
பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா

1. உதவி வருகிறார், பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

2. காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

3. வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

4. பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

5. பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்

6. உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Payapadamaaten Naan Payapadamaaten
Yesu Ennodu Iruppathanaal
Aelaelo Ailasaa

1. Uthavi Varukiraar, Belan Tharukiraar
Ovvoru Naalum Kooda Varukiraar

2. Kaattu Veesatum Kadal Pongatum
Enathu Nanguram Yesu Irukkiraar

3. Valaikal Veesuvom, Meenkalai Pidipoom
Aathumaakalai Aruvadai Seivom

4. Pelapaduthukira Kiristhuvinaalae
Ellaavatrayum Seiya Belan Unndu

5. Parama Alaithalin Panthaya Porulukaai
Ilakkai Nokki Naam Padakaiottuvom

6. Ulakil Irukira Alakaiyai Vida
Ennil Iruppavar Migavum Periyavar

Devane Aarathikkiren – தேவனே ஆராதிக்கின்றேன்

Devane Aarathikkiren

தேவனே ஆராதிக்கின்றேன்
தெய்வமே ஆராதிக்கின்றேன்

1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்

2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
காண்பவரே ஆராதிக்கின்றேன்

3. முழுமனதோடு ஆராதிக்கின்றேன்
முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்

4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
எந்நாளும் வெற்றி தருவீர்

6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
எந்நாளும் சமாதானமே

Devane Aaraathikkindren
Deivame Aaraathikkindren

1. Athikaalaiyil Aaraathikkindren
Aanantha Saththaththodu Aaraathikkindren

2. Kanmalaiye Aaraathikkindren
Kaanbavare Aaraathikkindren

3. Muzhumanathodu Aaraathikkindren
Muzhanthaal Padiyittu Aaraathikkindren

4. Yehovaayireh Aaraathikkindren
Ellaame Paarththuk Kolveer

5. Yehovaanissi Aaraathikkindren
Ennaalum Vettri Tharuveer

6. Yehovaa Shaalom Aaraathikkindren
Ennaalum Samaathaaname

Nadanamadi Sthotharipaen – நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்

Nadanamadi Sthotharipaen
நடனமாடி ஸ்தோத்தரிப்பேன்
நாதா நான் உம்மைத் துதிப்பேன்
கைத்தாள ஓசையுடன்
கர்த்தா நான் உம்மைத் துதிப்பேன்
அல்லேலூயா

1. காண்பவரே காப்பவரே
கருணை உள்ளவரே
காலமெல்லாம் வழி நடத்தும்
கன்மலையே ஸ்தோத்திரம் – ஐயா

2. வல்லவரே நல்லவரே
கிருபை உள்ளவரே
வரங்களெல்லாம் தருபவரே
வாழ்வது உமக்காக – ஐயா

3. ஆண்டவரே உம்மைப்
பிரிந்து யாரிடத்தில் போவோம்
வாழ்வு தரும் வசனமெல்லாம்
உம்மிடம் தான் உண்டு – ஐயா

4. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே
அண்டி வந்தோம் ஆறுதலே
அடைக்கலமானவரே

Nadanamaadi sthoatharippaen
Naadhaa naan ummai thudhippaen
Kaithaala oasaiyudan
Karthaa naan ummai thudhippaen
Allealooyaa

1. Kaanbavarae kaappavarae
Karunai ullavarae
Kaalamellaam vazhi nadathum
Kanmalaiyae sthoathiram – Aiyaa

2. Vallavarae nallavarae
Kirubai ullavarae
Varangalellaam tharubavarae
Vaazhvadhu umakkaaga – Aiyaa

3. Aandavarae ummai pirindhu
Yaaridathil poavoam
Vaazhvu tharum vasanamellaam
Ummidam thaan undu – Aiyaa

4. Arputhamae adhisayamae
Aaloasanai kartharae
Andi vandhoam aarudhalae
Adaikkalamaanavarae – Aiyaa