Valthugirom Vanangugirom
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ
1. இலவசமாய் கிருபையினால்
நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
2. ஆவியினால் வார்த்தையினால்
மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை
3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
5. அற்புதமே அதிசயமே
ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா
Yesuve En Deivame – இயேசுவே என் தெய்வமே
Yesuve En Deivame
இயேசுவே என் தெய்வமே
என் மேல் மனமிரங்கும் (2)
1. நான் பாவம் செய்தேன்
உம்மை நோகச் செய்தேன் (2)
உம்மைத் தேடாமல் வாழ்ந்து வந்தேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
2. உம்மை மறுதலித்தேன்
பின் வாங்கிப் போனேன் (2)
உம் வல்லமை இழந்தேனையா -2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
3. முள்முடி தாங்கி
ஐயா காயப்பட்டீர் (2)
நீர் எனக்காக பலியானீர் -2
உம் இரத்தத்தால் கழுவிவிடும் – 2 இயேசுவே
4. துன்ப வேளையிலே
மனம் துவண்டு போனேன் (2)
உம்மை நினையாது தூரப் போனேன் – 2
என்னை மன்னியும் தெய்வமே இந்த
ஒரு விசை மன்னியுமே – இயேசுவே
5. அநியாயம் செய்தேன்
கடும்கோபம் கொண்டேன் (2)
பிறர் வாழ்வைக் கெடுத்தேனையா – 2
என்னை மன்னியும் தெய்வமே – 2 இயேசுவே
Iyeasuvea En Theyvamea
en meal manamirangkum (2)
1. Naan paavam cheythean
ummai noakach cheythean (2)
ummaith theadaamal vaazhnthu vanthean – 2
ennai manniyum theyvamea – 2 iyeasuvea
2. Ummai ma’ruthaliththean
pin vaangkip poanean (2)
um vallamai izhantheanaiyaa -2
ennai manniyum theyvamea – 2 iyeasuvea
3. Mu’lmudi thaangki
aiyaa kaayappaddeer (2)
neer enakkaaka paliyaaneer -2
um iraththaththaal kazhuvividum – 2 iyeasuvea
4. Thunpa vea’laiyilea
manam thuva’ndu poanean (2)
ummai ninaiyaathu thoorap poanean – 2
ennai manniyum theyvamea intha
oru visai manniyumea – iyeasuvea
5. Aniyaayam cheythean
kadumkoapam ko’ndean (2)
pi’rar vaazhvaik keduththeanaiyaa – 2
ennai manniyum theyvamea – 2 iyeasuvea
En Yesu Raja Sthothiram – என் இயேசு ராஜா
En Yesu Raja Sthothiram
என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரமே (2)
உயிருள்ள நாளெல்லாமே
1. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், பொறுமை அன்பு
நிறைந்து வாழ்பவரே
2. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்
3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனை கேட்டு
விடுதலை தருபவரே
4. உலகத்தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையும் மீட்டு
புதுவாழ்வு தந்து விட்டீர்
Viduthalai Nayagan – விடுதலை நாயகன்
Viduthalai Nayagan
விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்
1. நான் பாடிப்பாடி மகிழ்வேன் – தினம்
ஆடி ஆடித்துதிப்பேன் – எங்கும்
ஓடி ஓடி சொல்லுவேன்
என் இயேசு ஜீவிக்கிறார்
2. அவர் தேடி ஓடி வந்தார்
என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
புது மனிதனாக மாற்றினார்
3. அவர் அன்பின் அபிஷேகத்தால்
என்னை நிரப்பி நடத்துகின்றார்
சாத்தானின் வல்லமை வெல்ல
அதிகாரம் எனக்குத் தந்தார்
4. செங்கடலைக் கடந்து செல்வேன்
யோர்தானை மிதித்து நடப்பேன்
எரிகோவை சுற்றி வருவேன்
எக்காளம் ஊதி ஜெயிப்பேன்
Kartharai Nokki – கர்த்தரை நோக்கி
Kartharai Nokki
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்
1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்
2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உதவி செய்து காத்திடுவார்
உள்ளத்தில் தங்கி நடத்திடுவார்
3. வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையே சார்ந்திருப்போம்
அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார்
4. சுயபுத்தியில் சாய்ந்திடாமல்
முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்
வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
வாழ்வின் பாதை காட்டிடுவார்
Karthave Umathu – கர்த்தாவே உமது கூடாரத்தில்
Karthave Umathu
கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)
1. உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே
2. நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே
3. கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே
4. கைகளில் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே
Ummale Naan Oru Senaikul – உம்மாலே நான் ஒரு
Ummale Naan Oru Senaikul
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்வேன்
மதிலைத் தாண்டிடுவேன் – 2
ஐயா ஸ்தோத்திரம் இயேசையா ஸ்தோத்திரம்
1. எனது விளக்கு எரியச் செய்தீர்
இருளை ஒளியாக்கினீர்
2. மான்களைப் போல ஓடச் செய்தீர்
உயர அமரச் செய்தீர்
3. பெலத்தால் இடைகட்டி
வழியை செவ்வையாக்கி வாழவைத்தவரே
4. நீரே என் கன்மலை நீரே என் கோட்டை
எனது அடைக்கலமே
5. இரட்சிப்பின் கேடயம் எனக்கு தந்தீர்
எந்நாளும் தாங்கிக் கொண்டீர்
6. கால்கள் வழுவாமல் நடக்கும் பாதையை
அகலமாக்கிவிட்டீர்
7. இம்மட்டும் காத்தீர் இனிமேலும் காப்பீர்
எந்நாளும் துதித்திடுவேன்
8. அற்புதம் செய்தீர் அதிசயம் செய்தீர்
அப்பனே உம்மைத் துதிப்பேன்
Manathurugum Deivame – மனதுருகும் தெய்வமே
Manathurugum Deivame
மனதுருகும் தெய்வமே இயேசையா
மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை
உம் அன்பிற்கு அளவே இல்லை
அவை காலைதோறும் புதிதாயிருக்கும்
1. மெய்யாக எங்களது
பாடுகளை ஏற்றுக் கொண்டு
துக்கங்களை சுமந்து கொண்டீர் – ஐயா
2. எங்களுக்கு சமாதானம்
உண்டுபண்ணும் தண்டனையோ
உம்மேலே விழுந்ததையா – ஐயா
3. சாபமான முள்முடியை
தலைமேலே சுமந்து கொண்டு
சிலுவையிலே வெற்றி சிறந்தீர் – ஐயா
4. எங்களது மீறுதலால்
காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்
தழும்புகளால் சுகமானோம் – உந்தன்
5. தேடிவந்த மனிதர்களின்
தேவைகளை அறிந்தவராய்
தினம் தினம் அற்புதம் செய்தீர் – ஐயா
Manathurugum Deivame
Manathurukum Theyvamae Iyaesaiyaa
Manathaarath Thuthippaen Sthoththarippaen
Neer Nallavar Sarva Vallavar
Um Irakkaththirku Mutivae Illai
Um Anpirku Alavae Illai
Avai Kaalaithorum Puthithaayirukkum
1. Meyyaaka Engalathu
Paadukalai Aettuk Konndu
Thukkangalai Sumanthu Konnteer – Iyaa
2. Engalukku Samaathaanam
Unndupannnum Thanndanaiyo
Ummaelae Vilunthathaiyaa – Iyaa
3. Saapamaana Mulmutiyai
Thalaimaelae Sumanthu Konndu
Siluvaiyilae Vetti Sirantheer – Iyaa
4. Engalathu Meeruthalaal
Kaayappattir Norukkappattir
Thalumpukalaal Sukamaanom – Unthan
5. Thaetivantha Manitharkalin
Thaevaikalai Arinthavaraay
Thinam Thinam Arputham Seytheer – Iyaa
Athimaram Thulir – அத்திமரம் துளிர்விடாமல்
Athimaram Thulir
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்
என் தேவனுக்குள் களிகூருவேன்
1. ஒலிவ மரம் பலன் அற்றுப் போனாலும்
வயல்களிலே தானியமின்றிப் போனாலும்
2. மந்தையிலே ஆடுகளின்றிப் போனாலும்
தொழுவத்திலே மாடுகளின்றிப் போனாலும்
3. எல்லாமே எதிராக இருந்தாலும்
சூழ்நிலைகள் தோல்வி போல தெரிந்தாலும்
4. உயிர்நண்பன் என்னை விட்டுப் பிரிந்தாலும்
ஊரெல்லாம் என்னைத் தூற்றித்திரிந்தாலும்
Yesu Sumanthu Kondare – இயேசு சுமந்து கொண்டாரே
Yesu Sumanthu Kondare
1. இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தேவையில்லை
இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்
2. பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் – இயேசுவின்
3. என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்