Nanmaigalin Nayagane
நன்மைகளின் நாயகனே
நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே
1. கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே
2. உமக்காய் காத்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன்
3. கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர்
4. எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே
En Uyirae Andavarai
என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒருபோதும் மறவாதே
1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
2. படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டுகிறார்
3. வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்க நம்மைநடத்திச் செல்வார்
4. கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
5. மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்வார்
6. இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
7. எப்போதும் கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
8. பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை
Thanirgal Kadakum Pothu
தண்ணீர்கள் கடக்கும்போது என்னோடு இருக்கிறீர்
அக்கினியில் நடக்கும்போது கூடவே வருகின்றீர்…
மூழ்கிப் போவதில்லை நான் எரிந்து போவதில்லை
1. என்மேல் அன்புகூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
2. உமது பார்வையிலே
விலையேற பெற்றவன் நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
3. பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
ஆபத்திலே பாடி மகிழச் செய்தீரே
4. பெற்ற தாய் தனது பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
5. என்னை படைத்தவரே உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
6. என்னை மீட்கும்படி தன்னை பலியாக்கினீர்
எனக்குள் வந்து விட்டீரே
(என்னை) ஆட்கொண்டு நடத்திச் செல்வீரே
Ennai Kakavum
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும்
எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம்
எனக்காய் யுத்தம் செய்து
இரட்சித்து வழி நடத்தி
என்னோடு வருபவரே ஸ்தோத்திரம்
1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால்
ஏழு வழியாக துரத்திடுவீர்
2. வறட்சி காலங்களில் திருப்தியாக்கி
எலும்புகளை வலிமை ஆக்குகிறீர்
3. போரிட கைகளுக்கு பயிற்சி தந்து
விரல்களை யுத்தம் செய்ய பழக்குகிறீர்
4. நலிந்தோரை நல்வாக்கால் ஊக்குவிக்க
கல்விமான் நாவை எனக்குத் தந்தீரே
5. காலை தோறும் என்னை எழுப்புகிறீர்
கர்த்தர் உம் குரல் கேட்க பேசுகிறீர்
6. வற்றாத நீருற்றாய் ஓடச்செய்தீர்
வளமான தோட்டமாக மாற்றுகிறீர்
Ennai Nadathum Yesu Natha
என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா
2. தேடி வந்தீர் பாட வைத்தீர் உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் உமக்கு நன்றி ஐயா
3. பாவமில்லா தூயவாழ்வு வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே
4. துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
5. கலக்கம் நீக்கி கண்ணீர் துடைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
கவலை மாற்றி கரத்தால் அணைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
6. உலகம் மாயை எல்லாம் மாயை
உணர்ந்தேன் உணர்ந்துக் கொண்டேன்
உறவு பாசம் குப்பையென்றறிந்து
உம்மையே பின் தொடர்ந்தேன்
Unnai Kaangiraar
உன்னைக் காண்கிறார் – உன்
கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்
அதிசயம் செய்திடுவார் -உன்னை
1. நோய்நொடியில் வாடுகின்ற
உன்னைக் காண்கிறார்
நொடிப்பொழுது சுகம் தந்து
உன்னைத் தேற்றுவார்
2. கடன் தொல்லையால் கதறுகின்ற
உன்னைக் காண்கிறார்
உடன் இருந்த நடத்திடுவார்
ஒருபோதும் கைவிடார்
3. எதிர்காற்றோடு போராட்டமா
உன்னைக் காண்கிறார்
உன் படகில் ஏறுகிறார் அமைதி தருகிறார்
4. உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன்னை எதிர்த்து வழக்காடுவோர்
உன் சார்பில் வருவார்கள்
5. கிறிஸ்துவோடு இணைந்து வாழும் நமக்கு
வெற்றி உண்டு
நறுமணம் போல் பரவிடுவோம்
நற்செய்தி முழங்குவோம்
துன்பமா.. துயரமா
அது தண்ணீர் பட்ட உடை போன்றதம்மா – 2
காற்றடிச்சா.. வெயில் வந்தா
காய்ந்து போய்விடும் கலங்காதே – 2
1. இயேசுதான் நீதியின் கதிரவன்
(அவர்) உனக்காக உதயமானார் உலகத்திலே – 2
நம்பி வா.. வெளிச்சம் தேடி வா (2)
உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது (2)
2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்
இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார் – 2
எழுந்து வா.. போதும் பயந்தது (2)
உன் புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது (2)
3. உன் துக்கங்கள் இயேசு சுமந்து கொண்டார்
உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார் – 2
நீ சுமக்க.. இனி தேவையில்ல (2)
ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது (2)
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு இல்லை
(என்) இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை – 2
கூப்பிடு.. இயேசு இயேசு என்று (2)
உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார் (2)
3. Un Thukkangkal Yesu Sumanthu Kondaar
Un Pinigal Ellaam Yettruk Kondaar – 2
Nee Sumakka.. Ini Thevaiyilla (2)
Oru Sugavaazhvu Innaalil Thulirththathu (2)
4. Raththam Sinthuthal Illaamal Mannippu Illai
(En) Yesu Naamam Sollaamal Meetpu Illai – 2
Kooppidu.. Yesu Yesu Endru (2)
Un Kuraikalellaam Niraivaakki Nadaththiduvaar (2)