En Yesu Unnai
என் இயேசு உன்னைத் தேடுகிறார்
இடமுண்டோ மகனே உன் உள்ளத்தில்
1. கதறிடும் உன்னைப் பார்க்கின்றார்-உன்
கண்ணீரைத் துடைக்க வருகின்றார்
உதவிடும் கரத்தை நீட்டுகிறார்-உன்
உள்ளத்தில் வாழத் துடிக்கின்றார்
2. சிலுவை மரணம் உனக்காக
சிந்திய திரு இரத்தம் உனக்காக
உன் பாவம் சுமந்து தீர்த்தாரே – தன்
உயிர் தந்து உன்னை மீட்டாரே
3. மார்த்தாள் வீட்டில் இடம் கொடுத்தாள்
மரித்த லாசரை மீண்டும் கண்டாள்
கலங்கிடும் மனிதா வருவாயா – என்
கர்த்தரின் பாதம் விழுவாயா
4. சகேயு உடனே இறங்கி வந்தான்
சந்தோஷமாக வரவேற்றான்
பாவங்கள் அனைத்தும் அறிக்கை செய்தான்
பரலோக இன்பம் பெற்றுக் கொண்டான்
5. பேதுரு படகில் இடம் கொடுத்தான்
பெரும் தோல்வி மாறி மகிழ்வடைந்தான்
அதிசய தேவனை கண்டு கொண்டான்-என்
ஆண்டவன் பின்னே நடந்து சென்றான்
1. ஒவ்வொரு நாளும் எனது கண்முன்
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்
அசைக்கப்படுவதில்லை – நான்
2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்
உள்ளத்தில் இல்லையே
நிம்மதியே நிரந்தரமே – என்
நினைவெல்லாம் ஆள்பவரே
3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்
அடிமை நான் கதறுகிறேன்
என் ஜனங்கள் அறியணுமே
இரட்சகர் உம்மை தேடணுமே
4. உமது வேதம் எனது மகிழ்ச்சி
ஓய்வின்றி தியானிக்கின்றேன்
ஆற்றங்கரை மரமாக
அயராமல் கனி கொடுப்பேன்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்
1. திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
3. சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த
அணைத்து மகிழ்பவரே
5. உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி – என்னை
பாட வைத்தீரே
En Janame Manam
என் ஜனமே மனந்திரும்பு
இயேசுவிடம் ஓடி வா
இறுதிக்காலம் வந்தாச்சு
இன்னமும் தாமதமேன்
1. உன்னை நினைத்து சிலுவையிலே
தாகம் தாகம் என்றார்
உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க
தன்னையே பலியாக்கினார்
2. தூய இரத்தம் உனக்காக
தீய உன் வாழ்வு மாற
காயங்கள் உனக்காக
உன் நோயெல்லாம் தீர
3. உனக்காக பரலோகத்தில்
உறைவிடம் கட்டுகிறார்
உன்னைத் தேடி வருகின்றார்
இன்று நீ ஆயத்தமா – மகனே
4. உன் பாவங்கள் போக்கிடவே
சிலுவையை சுமந்தாரே
உன் சாபங்கள் நீக்கிடவே
முள்முடி தாங்கினாரே
1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே
2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட
அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த
3. பாடுகள் அநுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிர்கூர்;ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்
4. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் நான்
5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்
6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்
Karthar Mel Barathai
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்
2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்
3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்
4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்
5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்
6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்