Ratha Kottai Kulle – இரத்தக் கோட்டைக்குள்ளே

Ratha Kottai Kulle
இரத்தக்கோட்டைக்குள்ளே
நான் நுழைந்துவிட்டேன்
இனி எதுவும் அணுகாது
எந்தத் தீங்கும் தீண்டாது

1. நேசரின் இரத்தம் என்மேலே
நெருங்காது சாத்தான்
பாசமாய் சிலுவையில் பலியானார்
பாவத்தை வென்று விட்டார்

2. இம்மட்டும் உதவின எபினேசரே
இனியும் காத்திடுவார்
உலகிலே இருக்கும் அவனை விட
என் தேவன் பெரியவரே

3. தேவனே ஒளியும் மீட்புமானார்
யாருக்கு அஞ்சிடுவேன்
அவரே என் வாழ்வின் பெலனானார்
யாருக்கு பயப்படுவேன்

4. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
மறவாத என் நேசரே
ஆயனைப் போல நடத்துகிறீர்
அபிஷேகம் செய்கின்றீர் – என்னை

5. மலைகள் குன்றுகள் விலகினாலும்
மாறாது உம் கிருபை
அனாதி சிநேகத்தால் இழுத்துக்கொண்டீர்
அணைத்து சேர்த்துக் கொண்டீர்

Ratha Kottai Kulle
Naan Nulainthu Vittaen
Inni Ethuvum Anukaathu
Entha Theengum Theendaathu

1. Iratham En Maelae
Nerungaathu Saathaan
Paasamaai Siluvaiyil Paliyaanaar
Paavathai Vendru Vittar

2. Immattum Uthavina Ebinesare
Iniyum Kaathiduvaar
Ulakilae Irukkum Avanai Vida
En Devan Periyavarae

3. Devanae Oliyum Meetpumaanaar
Yaarukku Anjiduvaen
Avarae En Vaalvin Belanaanaar
Yaarukku Payapaduvaen

4. Thaai Than Pillaiyai Maranthaalum
Maravaatha En Nesarae
Aayanai Pola Nadathukireer
Abishaekam Seykindrer

5. Malaikal Kundrugal Vilakinaallum
Maaraathu Um Kirubai
Anaathi Sinaekathaal Iluthu Konder
Annaithu Serthu Konder

Ennai Nirappum – என்னை நிரப்பும் இயேசு

Ennai Nirappum
என்னை நிரப்பும் இயேசு தெய்வமே
இன்று நிரப்பும் உந்தன் ஆவியால்

1. பேய்களை ஓட்டி நோய்களைப் போக்கும்
பெலனே வாருமே
பெலவீனம் நீக்கி பலவானாய் மாற்றும்
வல்லமையே வாருமே
2. தேற்றரவாளர் பரிசுத்த ஆவி
தேற்றிட வாருமே
ஆற்றலைக் கொடுத்து அன்பால் நிரப்பும்
ஆவியே வாருமே
3. வரங்களைக் கொடுத்து வாழ்வை அளிக்கும்
வள்ளலே வாருமே
கனிகளால் நிரப்பி காயங்கள் ஆற்றும்
கருணையே வாருமே
4. கோபங்கள் போக்கி சுபாவங்கள் மாற்றும்
சாந்தமே வாருமே
பாவங்க்ள கழுவிப் பரிசுத்தமாக்கம்
பரமனே வாருமே

Umakku Magimai – உமக்கு மகிமை தருகிறோம்

Umakku Magimai
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம் அல்லேலூயா

1. தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
2. வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே
3. வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
4. கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே

Unnaiye Veruthuvittal – உன்னையே வெறுத்து

Unnaiye Veruthuvittal
உன்னையே வெறுத்துவிட்டால்
ஊழியம் செய்திடலாம்
சுயத்தை சாகடித்தால்
சுகமாய் வாழ்ந்திடலாம்

1. சிலுவை சுமப்பதனால் சிந்தையே மாறிவிடும்
நீடிய பொறுமை வரும் நிரந்தர அமைதிவரும்
2. பெயர் புகழ் எல்லாமே இயேசுவின் நாமத்திற்கே
கிறிஸ்து வளரட்டுமே நமது மறையட்டுமே
3. நாளைய தினம் குறித்து கலங்காதே மகனே
இதுவரை காத்த தெய்வம் இனியும் நடத்திடுவார்
4. சேர்த்து வைக்காதே திருடன் பறித்திடுவான்
கொடுத்திடு கர்த்தருக்கே குறைவின்றி காத்திடுவார்
5. தன்னலம் நோக்காமல் பிறர் நலம் தேடிடுவோம்
இயேசுவில் இருந்த சிந்தை என்றுமே இருக்கட்டுமே

Trachai Chadiya – திராட்சை செடியே

Trachai Chadiya
திராட்சை செடியே இயேசு ராஜா
உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்
உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்
திராட்சை செடியே இயேசு ராஜா

1. பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே
பரிசுத்தமானவரே – ஐயா
உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால்
கள்ளம் நீங்குதையா – எனக்கு
2. குயவன் கையில் உள்ள களிமண்நாங்கள்
ஏந்தி வனைந்திடுமே ஐயா
சித்தம் போல் உருவாக்கும்
சுத்தமாய் உருமாற்றம்
நித்தம் உம் கரத்தில் – நாங்கள்
3. வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்
கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள்
வேதத்தை ஏந்துகிறோம்
வாசித்து மகிழுகின்றோம்
தியானம் செய்கின்றோம் – நாங்கள்

Eppadi Naan Paaduven – எப்படி நான் பாடுவேன்

Eppadi Naan Paaduven
எப்படி நான் பாடுவேன்
என்ன சொல்லி நான் துதிப்பேன் -உம்மை

1. இரத்தம் சிந்தி மீட்டவரே
இரக்கம் நிறைந்தவரே

2. அபிஷேகித்து அணைப்பவரே
ஆறுதல் நாயகனே

3. உந்தன் பாதம் அமர்ந்திருந்து
ஓயாமல் முத்தம் செய்கிறேன்

4. என்னை விட்டு எடுபடாத
நல்ல பங்கு நீர்தானையா

5. வருகையில் எடுத்துக் கொள்வீர்
கூடவே வைத்துக் கொள்வீர்

6. உளையான சேற்றினின்று
தூக்கி எடுத்தவரே

7. உந்தன் நாமம் உயர்த்திடுவேன்
உம் விருப்பம் செய்திடுவேன்

Eppadi naan paaduvaen
Enna solli naan thudhippaen -ummai

1. Rattham sindhi meettavarae
Irakkam niraindhavarae

2. Abishaegithu anaippavarae
Aarudhal naayaganae

3. Undhan paadham amarndhirundhu
Oayaamal muththam seigiraen

4. Ennai vittu edupadaadha
Nalla pangu neerthaanaiyaa

5. Varugaiyil eduthu kolveer
Koodavae vaithu kolveer

6. Ulaiyaana saetrinindru
Thookki eduthavarae

7. Undhan naamam uyarthiduvaen
Um viruppam seidhiduvaen

Boomiyin Kudigale – பூமியின் குடிகளே

Boomiyin Kudigale
பூமியின் குடிகளே வாருங்கள்
கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள்

1. மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சப்தத்தோடே
திருமுன் வாருங்கள் – அவர்
2. கர்த்தரே நம் தேவனென்று
என்றும் அறிந்திடுங்கள்
அவரே நம்மை உண்டாக்கினார்
அவரின் ஆடுகள் நாம்
3. துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் துதித்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
4. நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
அவர் வசனம் தலைமுறைக்கும்
தலைமுறைக்கும் உள்ளது

Yesuvin Karangalai – இயேசுவின் கரங்களை

Yesuvin Karangalai
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன்
எதற்கும் பயமில்லையே
இனியும் கவலை எனக்கில்லையே அல்லேலூயா (4)

1. இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக் கொண்டேன்
இனிவரும் பலன்மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும்போதுமே
2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்
3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்
5. ஆட்கொண்ட தேவனை நம்புகிறேன்
அவருக்குள் வேர் கொண்டு வளருகிறேன்
கோடைக்காலம் வந்தாலும் அச்சமில்லையே
வறட்சிக் காலம் வந்தாலும் கவலையில்லையே
6. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்

Karthar Namam En – கர்த்தர் நாமம்

Karthar Namam En

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன் – 2

1. யெகோவா யீரே
எல்லாமே பார்த்துக் கொள்வீர் – 2
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா (2)

2. யெகோவா நிசியே
எந்நாளும் வெற்றி தருவீர் – 2
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே (2)

3. யெகோவா ரஃப்பா
சுகம்தரும் தெய்வமே – 2
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா (2)

4. யெகோவா ரூவா
எங்கள் நல்ல மேய்ப்பரே – 2
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே (2)

5. யெகோவா ஷம்மா
கூடவே இருக்கிறீர் – 2
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா (2)

6. யெகோவா ஷாலோம்
சமாதானம் தருகின்றீர் – 2
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே (2)

Karththar Naamam En Pugalidame
Karuththodu Thuthiththiduven – 2

1. Yekovaa Yeere
Ellaame Paarthuk Kolveer – 2
Kalangalappaa Naanga Kalangalappaa (2)

2. Yekovaa Nisiye
Ennaalum Vettri Tharuveer – 2
Sthothirame Appa Sthothirame (2)

3. Yekovaa Raafhaa
Sugamtharum Theivame – 2
Kalangalappaa Naanga Kalangalappaa (2)

4. Yekovaa Roovaa
Engal Nalla Meyppare – 2
Sthothirame Appa Sthothirame (2)

5. Yekovaa Shammaah
Koodave Irukkireer – 2
Kalangalappaa Naanga Kalangalappaa (2)

6. Yekovaa Shaalom
Samaathaanam Tharukintreer – 2
Sthothirame Appa Sthothirame (2)

 

Natha Um Thirukarathil – நாதா உம் திருக்கரத்தில்

Natha Um Thirukarathil
நாதா உம்திருக் கரத்தில் இசைக்கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்

1. ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே ஆனந்தமே – 2
2. எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்
3. புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
4. நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா
5. ஊரெல்லாம் செல்வேன் பறைசாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்