Song Tags: Father Berchmans Songs Lyrics

Yesu Kirusthuvin Rathame – இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே

Yesu Kirusthuvin Rathame
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே
எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2

இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2
எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு

1. பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமே
பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2
பரிசுத்தர் சமுகம் அணுகி செல்ல
தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

2. ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே
உறவாட செய்திடும் திரு இரத்தமே-2
சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே
சுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

3. வாதை வீட்டிற்குள் வராதிருக்க
தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2
அழிக்க வந்தவன் தொடாதபடி
காப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2 -இயேசுவின்

4. புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே
புது உடன்படிக்கையின் திரு இரத்தமே-2
நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே
நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே-2 -இயேசுவின்

Ennai Kaanbavarae – என்னைக் காண்பவரே

Ennai Kaanbavarae
என்னைக் காண்பவரே
தினம் காப்பவரே

ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர்
சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர்
நான் அமர்வதும் நான் எழுவதும்
நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர்

எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்
எல்லாமே அறிந்திருக்கின்றீர்
நடந்தாலும் படுத்தாலும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்

நன்றி ராஜா இயேசு ராஜா

முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச்
சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்
உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்
பற்றி பிடித்திருக்கின்றீர்

கருவை உம் கண்கள் கண்டன
மறைவாய் வளர்வதைக் கவனித்தீரே
அதிசயமாய் பிரமிக்கத்தக்கப்
பக்குவமாய் உருவாக்கினீர்

Ennai Kaanbavarae
Thinam Kaappavare

Aarainthu Arinthirukintreer
Suttri Suttri Sozhinthirukinteer
Naan Amarvathum Naan Muzhuvathum
Nantraai Neer Arinthirukintreer

Ennangal Yeakkangal Ellam
Ellamae Arinthirukintreer
Nadanthalum Paduthaalum
Appa Neer Arinthirukintreer

Nantri Raja Yesu Rajah

Munnum Pinnum Nerukki Nerukki
Suttri Ennao Sozhinthrukindeer
Adisayamai Pirrammikathakka
Pakkuvamaai Uruvakineer

Marakka Paduvathillai Naan – மறக்கப்படுவதில்லை நான்

Marakka Paduvathillai Naan

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – 2

1. தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர் – கலக்கமில்ல

2. உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – கலக்கமில்ல

Ottathai Odi – ஓட்டத்தை ஓடி முடிக்கணும்

Ottathai Odi
ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி, தங்கச்சி) நீ
கர்த்தரையே முன் வைத்து
கலங்காமல் மகிழ்வுடனே

ஒன்றையும் குறித்து கலங்காமல்
பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
கண்ணீரோடும் தாழ்மையோடும்
கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

கிராமம் கிராமமாய் செல்லணுமே
வீடு வீடாய் நுழையணுமே – 2
கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2

Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே

Vaaikaalgal Orathilae
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்

இலையுதிரா மரம் நான் – 2

செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே-2

எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் – 2

கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் – 2
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்

Marakkappaduvathillai Nee – மறக்கப்படுவதில்லை நீ

Marakkappaduvathillai Nee

மறக்கப்படுவதில்லை நீ
என்னால் மறக்கப்படுவதில்லை – 2

கலங்காதே என் மகனே(மகளே)
கைவிட நான் மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
என் கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் – 2 -கலங்காதே

உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் – 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2

மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை – 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன் – உன்னை
எனக்கே நீ சொந்தம் – 2

ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை – 2

Veppamigu Naatkalil – வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே

Veppamigu Naatkalil
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் – 2
எப்போதும் பசுமை நானே
தப்பாமல் கனி கொடுப்பேன் – 2

நம்பியுள்ளேன் கர்த்தரையே
உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்
என்றென்றும் பாக்கியவான்

கிருபை சூழ்ந்து கொள்ளும்
பேரன்பு பின் தொடரும் – உம்

இதயம் அகமகிழும் – என்
இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்

இக்கட்டு துன்ப வேளையில்
காக்கும் தகப்பன் நீரே – 2
பூரண சமாதானம் – உம்
தினம் தினம் இதயத்திலே – 2

குருடன் பர்த்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2

நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
யவீரு உம்மை நம்பியதால்
மகள் அன்று சுகம் பெற்றாள்

Unnatha Maanavarae – உன்னதமானவரே என்

Unnatha Maanavarae
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2

நீர்தானே என் உறைவிடம்
நீர்தானே என் புகலிடம்
ஆதலால் ஆபத்து நேரிடாது
எந்த தீங்கும் மேற்கொள்ளாது
கால் கல்லில் மோதாமலே
காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே

சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – 2
சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்

நான் நம்பும் தகப்பன் நீர் என்று
நான் தினம் சொல்லுவேன் – 2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
தப்புவித்து காப்பாற்றுவீர் – 2

மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
ஆபத்து நேரம் என்னோடு இருந்து
தப்புவித்து கனப்படுத்துவீர்

நீடிய ஆயுள் தந்து
திருப்தியாக்குகிறீர்
உமது சிறகால் மூடி மூடி
மறைத்து பாதுகாக்கின்றீர்

வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலை எனக்குண்டு
உம்திரு நாமம் அறிந்ததால்
எனக்கு உயர்வு நிச்சயமே

Aathumave Nandri Sollu – ஆத்துமாவே நன்றி சொல்லு

Aathumave Nandri Sollu
ஆத்துமாவே நன்றி சொல்லு
முழு உள்ளத்தோடே – என் – 2

கர்த்தர் செய்த நன்மைகளை
ஒரு நாளும் மறவாதே – 2 (…ஆத்துமாவே)

1. குற்றங்களை மன்னித்தாரே
நோய்களை நீக்கினாரே – 2
படுகுழியினின்று மீட்டாரே
ஜீவனை மீட்டாரே – 2 (…கர்த்தர் செய்த)

2. கிருபை இரக்கங்களால்
மணிமுடி சூட்டுகின்றார் – 2
வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
திருப்தி ஆக்குகின்றார் – 2 (…கர்த்தர் செய்த)

3. இளமை கழுகு போல
புதிதாக்கி மகிழ்கின்றார் – நம் – 2
ஓடினாலும் நடந்தாலும்
பெலன் குறைவதில்லை – நாம் – 2 (…கர்த்தர் செய்த)

4. கர்த்தர் தம் வழிகளெல்லாம்
மோசேக்கு வெளிப்படுத்தினார் – 2
அதிசய செயல்கள் காணச் செய்தார்
ஜனங்கள் காணச் செய்தார் – 2 (…கர்த்தர் செய்த)

5. எப்போதும் கடிந்து கொள்ளார்
என்றென்றும் கோபம் கொண்டிரார் – 2
குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லை
மன்னித்து மறந்தாரே – 2 (…கர்த்தர் செய்த)

6. தகப்பன் தன் பிள்ளைகள் மேல்
தயவு காட்டுவது போல் – 2
கருணை இரக்கம் காட்டுகிறார்
மறவாமல் நினைக்கின்றார் – 2 (…கர்த்தர் செய்த)

7. அவரது பேரன்பு
வானளவு உயர்ந்துள்ளது – 2
கிழக்கு மேற்கு தூரம் போல
அகற்றிவிட்டார் நம் குற்றங்கள் – 2 (…கர்த்தர் செய்த)

Aaththumave Nandri Sollu
Muzhu Ullathode – En – 2

Karthar Seidha Nanmaigalai
Oru Naalum Maravadhe – 2 (…Aaththumave)

1. Kuttrangalai Mannithare
Noigalai Neekkinaare – 2
Padukuzhiyinindru Meettaare
Jeevanai Meettaare – 2 (…Karthar Seidha)

2. Kirubai Irakkangalaal
Manimudi Soottugindraar – 2
Vaazhnaalellaam Nanmaigalaal
Thirupthi Aakkugindraar – 2 (…Karthar Seidha)

3. Ilamai Kazhugu Pola
Pudhidhaakki Magizhgindraar – Nam – 2
Odinaalum Nadandhaalum
Belan Kuraivadhillai – Naam – 2 (…Karthar Seidha)

4. Karthar Tham Vazhigalellaam
Mosekku Velippaduththinaar – 2
Adhisaya Seyalgal Kaanach Cheidhaar
Janangal Kaanach Cheidhaar – 2 (…Karthar Seidha)

5. Eppodhum Kadindhu Kollaar
Endrendrum Kobam Kondiraar – 2
Kuttrangalukkerppa Nadaththuvadhillai
Manniththu Marandhaare – 2 (…Karthar Seidha)

6. Thagappan Than Pillaigal Mel
Dhayavu Kaattuvadhu Pol – 2
Karunai Irakkam Kaattugiraar
Maravaamal Ninaikkindraar – 2 (…Karthar Seidha)

7. Avaradhu Peranbu
Vaanalavu Uyarndhulladhu – 2
Kizhakku Merkku Dhooram Pola
Agattrivittaar Nam Kuttrangal (…Karthar Seidha)

Enni Enni Paar – எண்ணி எண்ணிப் பார்

Enni Enni Paar
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்
எபிநேசர் செய்த நன்மைகளை – 2

நன்றி நன்றி நன்றி
கோடி கோடி நன்றி
பலிகள் செலுத்திடுவோம் – 2

1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய
நீதிமான் ஆக்கினாரே – 2
நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய
நித்திய ஜீவன் தந்தார் – 2 -நன்றி

2. காயப்பட்டார் நாம் சுகமாக
நோய்கள் நீங்கியதே – 2
சுமந்து கொண்டார் நம் பாடுகள்
சுகமானோம் தழும்புகளால் – 2

3. சாபமானார் நம் சாபம் நீங்க
மீட்டாரே சாபத்தினின்று
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் – 2

4. ஏழ்மையானார் சிலுவையிலே
செல்வந்தனாய் நாம் வாழ
சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற
முடிவில்லா வாழ்வு தந்தார் – 2