Ootra Pada Vendume – ஊற்றப்பட வேண்டுமே

Ootra Pada Vendume

ஊற்றப்பட வேண்டுமே உன்னதத்தின் ஆவி
உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா
முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியை
பின்மாரியாக இன்று பொழிந்திடுமே – 2

எண்ணெய் அபிஷேகமே.. என் தலையை நனைக்க
ஆவியில் நிரப்புமே.. பாத்திரம் வழிந்தோடும்
நீச்சல் ஆழம் மூழ்கியே.. நேசர் அன்பில் மகிழ
அக்கினி அபிஷேகம்.. எந்தன் ஆவல் தீர்த்திடும் (…ஊற்றப்பட)

1. தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம்
போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே – 2 (…எண்ணெய்)

2. ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம்
ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் – 2 (…எண்ணெய்)

3. ஒருமனதோடு கூடி வந்துள்ளோம்
தேவ புத்திரர் என முத்திரை போடும் – 2 (…எண்ணெய்)

4. ஜீவ பலியாக எம்மை ஒப்புவிக்கிறோம்
சகல சத்தியத்திலும் எம்மை நடத்தும் – 2 (…எண்ணெய்)

5. ஆவியின் வரங்களை அருள் செய்யும் தேவா
ஆவியின் கனிகள் என்றும் ஈந்திடவே – 2 (…எண்ணெய்)

Oottrappada Vendume Unnathaththin Aavi
Uyirppikka Vendum Emmai Devaa
Munmaariyaaga Andru Pozhinthitta Aaviyai
Pinmaariyaaga Indru Pozhinthidume – 2

Yennai Abishegame.. En Thalaiyai Nanaikka
Aaviyil Nirappume.. Paaththiram Vazhinthodum
Neechchal Aazham Moozhgiye.. Nesar Anbil Magizha
Akkini Abishegam.. Enthan Aaval Theerththidum (…Oottrappada)

1. Deva Mainthan Yesuvai Visuvaasiththom
Bhothikkum Aaviyaale Niraiththidume – 2 (…Oottrappada)

2. Jeba Venduthalile Thariththiruppom
Jegaththile Saatchiyaaga Emmai Niruththum – 2 (…Oottrappada)

3. Orumanathodu Koodi Vanthullom
Deva Puththirar En Muththirai Podum – 2 (…Oottrappada)

4. Jeeva Baliyaaga Emmai Oppuvikkirom
Sagala Saththiyaththilum Emmai Nadaththum – 2 (…Oottrappada)

5. Aaviyin Varangalai Arul Seyyum Devaa
Aaviyin Kanigal Endrum Eenthidave – 2 (…Oottrappada)

Meghangal Naduve – மேகங்கள் நடுவே வழிபிறக்கும்

Meghangal Naduve
1. மேகங்கள் நடுவே வழிபிறக்கும்
பூதங்கள் நடுவே நடந்து போவோம்
தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
இயேசுவின் கைகளில் நானிருப்பேன்
பரமன் இயேசுவின் புன்னகை முகம்
என் கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்

2. நாற்றிசையினின்றும் கூடிடுவார்
நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
தோத்திர கீதமே தொனித்து நிற்கும்
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

3. கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
கர்த்தரின் வருகை நாளின்போது
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

4. திருடன் வருகை போலிருக்கும்
தீவிரம் அவர் நாள் வெகுசமீபம்
காலையோ மாலையோ நள்ளிரவோ
பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்

Galeeliya Kadaloram – கலிலேயா கடற்கரையோரம்

Galeeliya Kadaloram
கலிலேயா கடற்கரையோரம்
ஓர் மனிதர் நடந்து சென்றார்
அவர்தான் இயேசு இரட்சகர்
உன் பாவத்தைப் போக்கும் உத்தமர்

1.காரிருள் சூழ்ந்தாலும் பெருங்கவலைகள்
தொடர்ந்தாலும் கண்ணீர் வடித்தாலும்
பெரும் கலக்கங்கள் பிடித்தாலும்
கர்த்தரின் குரல் உன்னை அழைக்கிறது
உன் கவலையை மாற்றிட துடிக்கிறது

நெஞ்சமே நினைத்திடு அவர்
அன்பினை ருசித்திடு

2.நண்பர்கள் பகைத்தாலும் – இந்த
நானிலம் வெறுத்தாலும்
பெற்றோர்கள் மறந்தாலும் உன்
உற்றார்கள் பிரிந்தாலும்
நாயகர் இயேசு உன்னை அறிந்திடுவார் – அவர்
நமையினால் வழி நடத்திடுவார் – நெஞ்சமே

3.ஏன் இந்த வேதனைகள்
என்று ஏங்கிடும் மனிதர்களே
என் இயேசுவின் போதனையை
ஏன் இன்று மறந்தீர்களோ
வேதனை தீர்த்திடும் வேந்தனவர் – மன
பாரத்தை போக்கிடும் தேவனவர் – நெஞ்சமே

Anbarin Nesam – அன்பரின் நேசம் ஆர்

Anbarin Nesam
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்? அதிசய
அன்பரின் நேசம் ஆர் சொல்லலாகும்?
துன்ப அகோரம் தொடர்ந்திடும் நேரம் – அதிசய

1. இதுவென் சரீரம் இதுவென்றன் ரத்தம்
என்னை நினைந்திடும்படி அருந்து மென்றாரே – அதிசய

2. பிரிந்திடும் வேளை நெருங்கினதாலே
வருந்தின சீஷர்க்காய் மறுகி நின்றாரே – அதிசய

3. வியாழனிரவினில் வியாகுலத்தோடே
விளம்பின போதகம் மறந்திடலாமோ? – அதிசய

4. செடியும் கொடியும் போல் சேர்ந்து தம்மோடே
முடிவு பரியந்தம் நிலைப்பீரென்றாரே – அதிசய

5. பக்தர் கட்காகப் பரமனை நோக்கி
மெத்தவும் ஊக்கமாய் வேண்டிக் கொண்டாரே – அதிசய

Ithuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

Ithuvarai Seitha
இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் (2 )

1. உவர் நிலமாக இருந்த என்னை
விளை நிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி (2)

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி (2)

3. உம்சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி (2)

Yesuvae Um Naamathinaal – இயேசுவே உம் நாமத்தினால்

Yesuvae Um Naamathinaal

இயேசுவே உம் நாமத்தினால்
இன்பமுண்டு யாவருக்கும்
நன்றியுள்ள இதயத்துடன்
கூடினோம் இந்நன்னாளிலே

எங்கள் தேவனே எங்கள் ராஜனே (2)
என்றும் உம்மையே சேவிப்போம்
நன்றியுள்ள சாட்சியாக
உமக்கென்றும் ஜீவிப்போம்

1. மண்ணை நாடி பொன்னையடைந்தோம்
புகழ் தேடி ஏமாற்றங் கொண்டோம்
விண்ணை நோக்கி ஜெயம் பெற்றோம்
இயேசுவின் தரிசனத்தால் (…எங்கள் தேவனே)

2. உன்னைக் கண்டழைக்கும் சத்தத்தை
கேட்டாயோ ஓ பாவியே
இன்று இயேசுவண்டை வாராயோ
நித்ய ஜீவன் பெற்றிடவே (…எங்கள் தேவனே)

3. இயேசுவை நாம் பின் செல்லுவோம்
உலகை என்றும் வெறுப்போம்
துன்ப பாதை சென்றிடுவோம்
என்றும் அவரின் பெலத்தால் (…எங்கள் தேவனே)

4. நிலையில்லா இவ்வுலகில்
நெறி தவறி நாம் அலைந்தோம்
நின்னொளி பிரகாசித்திட
நீங்கா ஜீவன் பெற்றிடவே (…எங்கள் தேவனே)

Yesuve Um Naamaththinaal
Inbamundu Yaavarukkum
Nandriyulla Idhayaththudan
Koodinom Innannaalile

Engal Devane Engal Raajane (2)
Endrum Ummaiye Sevippom
Nandriyulla Saatchiyaaga
Umakkendrum Jeevippom

1. Mannai Naadi Ponnaiyadainthom
Pugazh Thedi Yemaatrank Kondom
Vinnai Nokki Jeyam Pettrom
Yesuvin Tharisanaththaal (…Engal Devane)

2.Unnai Kandazhaikkum Saththaththai
Kettaayo Oh Paaviye
Indru Yesuvandai Vaaraayo
Nithya Jeevan Pettridave (…Engal Devane)

3. Yesuvai Naam Pin Selluvom
Ulagai Endrum Veruppom
Thunba Paathai Sendriduvom
Endrum Avarin Belaththaal (…Engal Devane)

4. Nilaiyillaa Ivvulagil
Neri Thavari Naam Alainthom
Ninnoli Pragaasiththida
Neengaa Jeevan Pettridave (…Engal Devane)

Chinna Chittu Kuruviye – சின்னஞ் சிட்டுக் குருவியே

Chinna Chittu Kuruviye
சின்னஞ் சிட்டுக் குருவியே (2) உன்னை
சந்தோஷமாய் படைச்சது யாரு …….
அங்குமிங்கும் பறந்துகிட்டு
ஆனந்தமாய் பாடுறீயே – உன்னை
அழகாக படைச்சது யாரு

1. ஐயோ ஐயோ இது தெரியாதா
ஒரு ஆண்டவர் எனக்கு மேலே இருக்கிறார்
உண்ண உணவும் கொடுக்கிறார்
உறங்க இடமும் கொடுக்கிறார் இந்த
உலகத்தையே படைச்சும் இருக்கிறார்

2. சின்னஞ் சிட்டுக் குருவியே (2) – உன்
சிறகை எனக்கு தந்திடுவாயா
உன்னைப் போல பாடிக்கிட்டு
உல்லாசமாய்ப் பறப்பதற்கு ஒரு
உதவி என்னக்கு செய்திடுவாயா

3. ஐயோ இனிமே அப்படிக் கேட்காதே
அந்த ஆண்டவர் கேட்டா கோபிச்சுக்குவாரு
எங்களைக் காக்கிற ஆண்டவர்
உங்களைக் காப்பது இல்லையா – அட
உங்களைத்தானே ரொம்பவும் நேசிக்கிறார்

4. ஆமாம் சிட்டுக் குருவியே (2)
இது மனுஷங்களுக்கு புரியவில்லையே
உங்களைக் காக்கிற ஆண்டவர்
எங்களைக் காக்க மாட்டாரோ
இந்த உண்மையும் ஏனோ தெரியவில்லையே
ல…ல…ல…ல…ல…ல…

Anbulla Yesaiya – அன்புள்ள இயேசையா

Anbulla Yesaiya
அன்புள்ள இயேசையா
உம பிள்ளை நான் ஐயா
ஆனந்த ஒளி பிறக்கும்
வாழ்வெல்லாம் வழி திறக்கும் (2)

1. காடு மேடு ஓடிய ஆடு
என்று என்னை வெறுத்திடவில்லை
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

2. பகலில் மேகம் இரவில் ஜோதி
பசிக்கு மன்னா ருசிக்கவும் அன்பு
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

3. தாகம் தீர ஜீவத் தண்ணீர்
உள்ளங் கையில் என்னையும் கண்டீர்
நாடி என்னைத் தேடிய தயவல்லவோ
பாடுவேன் வாழ்வெல்லாம் இன்பம் – அன்புள்ள

Padago Padagu Kadalile – படகோ படகு கடலிலே

Padago Padagu Kadalile
படகோ படகு கடலிலே படகு
கர்த்தர் இயேசு இல்லா படகு
கவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளு
காத்திடவோ யாருமில்லையே

1. வாலிபப்படகே உல்லாசப்படகே
தன் பெலன் நம்பும் தன்னலப்படகே
காலம் வரும் முன் உன் கோலம் மாறுமே
கர்த்தரையே தேடியே வருவாய் இன்றே – படகோ

2. குடிப்பழக்கத்தினால் குழம்பும் படகே
குடும்பத்தையே அழிக்கும் படகே
சடுதியினிலேச் சாய்ந்து போவாயே
அழைக்கும் அன்பர் இயேசுவையே நாடி வருவாயே – படகோ

Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரை

Anandamaga Anbarai Paduven
1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென்னாத்துமாவிற்கே
ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
ஜீவன் அழியாமை வெளியாக்கினால்

4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்