Anandamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரை

Anandamaga Anbarai Paduven
1.ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
ஆசையவரென்னாத்துமாவிற்கே
ஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்
ஆண்டவர் இயேசுபோல் ஆருமில்லையே

இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் இகத்தில் வேறெங்குமில்லையே
இயேசுவல்லால் இயேசுவல்லால்
இன்பம் வேறெங்குமில்லையே

2.தந்தை தாயும் உன்சொந்தமானோர்களும்
தள்ளிடினும் நான் தள்ளிடுவேனோ
தாங்கிடுவேன் என் நீதியின் கரத்தால்
தாபரமும் நல்ல நாதனுமென்றார்

3.கிறிஸ்து இயேசு பிரசன்னமாகவே
கிருபையும் வெளியாகினதே
நீக்கியே சாவினை நற்சுவிசேஷத்தார்
ஜீவன் அழியாமை வெளியாக்கினால்

4.ஒப்பில்லாத மகிமை நம்பிக்கை சந்தோஷமும்
தப்பறு தேசின் கிரீடமாகவே
அப்போஸ்தலர் தம் ஊழியத்தாலே
ஆதி விசுவாசத்தில் வளர்ந்திடுவோம்

5.அழுகையின் தாழ்வில் நடப்பவரே
ஆழிபோல் வான்மழை நிறைக்குமே
சேர்ந்திட சீயோனில் தேவனின் சந்நிதி
ஜெயத்தின்மேல் ஜெயமடைந்திடுவோம்

Aatharam Neer Thaan Aiya – ஆதாரம் நீர்தானையா

Aatharam Neer Thaan Aiya
ஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)

1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன (2) – என் நிலை மாற … – ஆதாரம்

2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை (2)
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதிதான் கலைகின்றது (2) – என் நிலை மாற … – ஆதாரம்

3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)
உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் நிலை மாற … – ஆதாரம்

Sornthu Pogathe En Nanbane – சோர்ந்து போகாதே என்

Sornthu Pogathe En Nanbane
1. சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியனே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
நீ கலங்காதே மனமே

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே – 2

2. என் ஆத்மநேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம் பிடித்து மகிமைதனில் அவர்
தினமும் நடத்துவார்

3. நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும்
மனம் கலங்காதே திகையாதே உன்
இயேசு இருக்கிறார்

Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய்

Karthave Yuga Yugamai
1. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர்

2. உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம்

3. பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன்

4. ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே

5. சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்

6. கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்

Yutha Raja Singam – யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

Yutha Raja Singam

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே – யூத

2. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துதித்திடவே பரனைத் துதித்திடவே – யூத

3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத

4. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத

5. மாதர் தூதரைக் கண்டக மகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார் – யூத

6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
மரிப்பதில்லை இனி மரிப்பதில்லை – யூத

7. பாவத்திற்கென்று ஒரு தரம் மரித்தார்
அவர் மரித்தார் ஒரே தரம் மரித்தார் – யூத

8. கிறிஸ்தவரே நாம் அவர் பாதம் பணிவோம்
பாதம் பணிவோம் பதத்தை சிரம் அணிவோம் – யூத

Yutha Raja Singam Uyirththelunthaar
Uyirththelunthaar Narakai Jeyiththelunthaar

1. Vaethaala Kanangal Otidavae
Otidavae Uruki Vaatidavae – Yootha

2. Vaanaththin Senaikal Thuthiththidavae
Thuthiththidavae Paranaith Thuthiththidavae – Yootha

3. Maranaththin Sangilikal Theripattana
Theripattana Notiyil Muripattana – Yootha

4. Elunthaar Enta Thoni Engum Kaetkuthae
Engum Kaetkuthae Payaththai Entum Neekkuthae – Yootha

5. Maathar Thootharaik Kanndaka Makilnthaar
Akamakilnthaar Paranai Avar Pukalnthaar – Yootha

6. Uyirththa Kiristhu Ini Marippathillai
Marippathillai Ini Marippathillai – Yootha

7. Paavaththirkentu Oru Tharam Mariththaar
Avar Mariththaar Orae Tharam Mariththaar – Yootha

8. Kiristhavarae Naam Avar Paatham Pannivom
Paatham Pannivom Pathaththai Siram Annivom – Yootha

Idhu Varai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக

Idhu Varai Seitha

இதுவரை செய்த செயல்களுக்காக
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

1.  உவர் நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உம்மை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி

2. தனி மரமாக இருந்த என்னை
கனி மரமாக மாற்றிய உம்மை
திசைகளும் கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி

3. உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே
சொந்தமாய் என்னையே ஏற்றுக் கொள்வீரே
சோர்விலும் தாழ்விலும் சோதனை யாவிலும்
தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி

Ootridume Um Vallavamiayai – ஊற்றிடுமே உம் வல்லமையை

Ootridume Um Vallavamiayai
ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட

1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2

2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே
நதியாய் பாய்ந்திடுமே – 2

3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2

Nadanthu Vantha Pathaigal Ellam – நடந்து வந்த பாதைகள் எல்லாம்

Nadanthu Vantha Pathaigal Ellam
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே
நித்தம் நித்தம் நினைத்துப் பார்க்கிறேன்
நான் கடந்து பாடுகள் எல்லாம் கர்த்தர் செய்த
நன்மைகளை எண்ணி துதிக்கிறேன்
நடக்கச் சொல்லித் தந்தவர் நடத்திக் காட்டுவார்
நெஞ்சைக் கொடுத்துப்பாரு இயேசு உன்னை துக்கி நிறுத்துவார்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

1. எத்தனை முறை நீயும் ஏமாந்து போயிருப்பே
யாருமில்லை என்று சொல்லி ஏங்கி ஏங்கி அழுதிருப்பே
முகத்தைப் பார்ப்பவன் மனிதன் அல்லவா
இதயத்தைக் காண்பவர் தேவன் அல்லவா
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

2. அனாதை என்றழுதா ஆண்டவன் தான் பொறுப்பாரா
அக்கிரமாங்கள் செய்திட்டாலும் இயேசு நம்மை வெறுப்பாரா
உள்ளங்கைகளில் உன்னை வரைந்தவர்
உனக்காய் சிலுவையில் ஜீவனை தந்தவர்
உன்னை மீட்கவே உயிரோடெழுந்தவர்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

3. உனக்கொரு கஷ்டம் வந்தா உறவுகள் கைகொடுப்பதில்லை
உன்னுடைய துயரங்களில் உன்க்கு பங்கு கொள்ள வருவதில்லை
உள்ளத்தின் பாரங்கன் அறிந்தவர் இயேசுதான்
உனக்கு உதவிட வருபவர் இயேசுதான்
நெஞ்சுக்குள்ளே நீ நினைத்தால்
ஓடிவரும் தேவன்தான்
நடந்து வந்த பாதைகள் எல்லாம் என் இயேசுவே

Yesu Yesu Endru Azhaithu – இயேசு இயேசு என்று அழைத்து

Yesu Yesu Endru Azhaithu
இயேசு இயேசு என்று அழைத்து
பேசு பேசு உன் கதையை – 2
உந்தன் குரலைக் கேட்டு
உன்னை மீட்டு வானகம் சேர்க்கும் தேவனவர்

1. வாழ்வாய் வழியாய் உயிராய் மண்ணில்
சுடராய் அணையா ஓளியாய்
வந்தார் மாபரன் இயேசு – உயிர்
தந்துனை மீட்டார் இயேசு
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

2. பாவிகள் நம்மை மீட்கவே மண்ணில்
ஆதவனாய் ஓளிர்ந்தெழுந்தார்
போதனைகள் பல தந்தே – நம்மை
வேதனையில் வெற்றிபெறச் செய்தார்
கல்வாரி சிகரமதில் (2) – இயேசு இயேசு

Yesuvuke Magimai – இயேசுவுக்கே மகிமை

Yesuvuke Magimai En Raajavuke Magimai
இயேசுவுக்கே மகிமை
என் இராஜாவுக்கே மகிமை

துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன்
என் இயேசு இராஜாவை – அல்லேலூயா

1. இயேசுவுக்கே நன்றி
என் இராஜாவுக்கே நன்றி
இயேசுவுக்கே மகிமை
என் இராஜாவுக்கே மகிமை – துதிப்பேன்

2. இயேசுவே இராஜா
இயேசுவே ஆண்டவர்
இயேசுவே கர்த்தர்
இயேசுவே மேய்ப்பர் – துதிப்பேன்

3. யாவே யீரே
தேவைகளை சந்திப்பார்
யாவே ரஃப்பா
சுகம் அளிக்கும் தேவன் – துதிப்பேன்

4. யாவே ஷம்மா
கூடவே இருக்கிறார்
யாவே எல்ஷடாய்
சர்வவல்லமை தேவன் – துதிப்பேன்

5. பரிசுத்த ஆவி
பரிசுத்த வல்லமை
பரிசுத்த அக்கினி
இப்போதே வரட்டும் – துதிப்பேன்

6. பரிசுத்த ஆவி
பரிசுத்த பிரசன்னம்
பரிசுத்த அக்கினி
இப்போதே இறங்கட்டும் – துதிப்பேன்