சாத்தான் புறப்பட்டு போ போ
என் இதயத்தில் உனக்கிடமில்லை
இயேசு என் இதயத்தில் வந்துவிட்டார்
புது சிருஸ்டியாய் மாறிவிட்டேன்
1. எதிர்த்து பேசும் தவளை
பொய்கள் சொல்லும் பாம்பும்
கோபம் கொள்ளும் புலிக்கு
என் இதயத்தில் இடம் இனியில்லை
2. சோம்பேறியான ஆமை
அசுத்தம் நிறைந்த பன்றி
பொறாமையுள்ள ஆட்டிற்கும்
மயல் பெருமைக்கும் இடம் இனியில்லை
Vaanga Vaanga Thambimaarey – வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க
Vaanga Vaanga Thambimaarey
வாங்க, வாங்க, தம்பிமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
வாங்க, வாங்க, தங்கைமாரே வாங்க
CGC-ல கலந்து கொள்ள வாங்க
பாட்டு உண்டு, கதையும் உண்டு
நடனம் உண்டு, நாடகம் உண்டு
அண்ணன்மாரும் அக்காமாரும் அன்போடு
சொல்லிதரும் பாடலும் உண்டு
அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பிரியமான
பிள்ளைகளாய் வாழ வழியுண்டு
Vaanga vaanga thambimaarey vaanga
CGC la kalanthu kolla vaanga
Vaanga vaanga thangaimaarey vaanga
CGC la kalanthu kolla vaanga
Paatu undu kadhayum undu
Nadanam undu naadagam undu
Annan maarum akka maarum anbodu
Sollitharum paadalum undu
Ammakum appavukum piriyamaana
Pillaigalaai vazha vazhiyundu
நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால்
1.
நான் கிறிஸ்துவுக்குள் இருந்தால்
புது சிருஸ்டியாயிருப்பேனே
பழையதெல்லாம் ஒளிந்து போகுமே
எல்லாமே புதிதாகுமே
II கொரிந்தியர் 5:17- ல்
இதனை கற்றுக் கொண்டேனே
Bakthare Vaarum – பக்தரே வாரும்
Bakthare Vaarum
Oh come all ye faithful – பக்தரே வாரும்
1. பக்தரே வாரும்
ஆசை ஆவலோடும்
நீர் பாரும், நீர் பாரும்
இப்பாலனை;
வானோரின் ராஜன்
கிறிஸ்து பிறந்தாரே!
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
சாஷ்டாங்கம் செய்ய வாரும்,
இயேசுவை.
2. தேவாதி தேவா,
ஜோதியில் ஜோதி,
மானிட தன்மை நீர் வெறுத்திலீர்.
தெய்வ குமாரன்,
ஒப்பில்லாத மைந்தன்;
3. மேலோகத்தாரே,
மா கெம்பீரத்தோடு
ஜென்ம நற்செய்தி பாடிப்
போற்றுமேன்;
விண்ணில் கர்த்தா நீர்
மா மகிமை ஏற்பீர்!
4. இயேசுவே, வாழ்க!
இன்று ஜென்மித்தீரே,
புகழும் ஸ்துதியும் உண்டாகவும்;
தந்தையின் வார்த்தை
மாம்சம் ஆனார் பாரும்.
Oh come all ye faithful in tamil
Bethalayil Piranthavarai – பெத்தலையில் பிறந்தவரைப்
Bethalayil Piranthavarai
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே – இன்னும்
1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்
2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்
3. முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்
4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்
5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்
Bethalayil Piranthavarai
Potri Thuthi Manamae – Innum
1. Saruvathayum Padaithaanda Saruva Vallavar – Ingu
Thaalmayulla Thaai Madiyil Thalai Saaykalaanaar – Bethalayil
2. Singaasanam Veetirukum Deva Mainthanaar – Ingu
Pangamutta Pasu Thotillil Paduthirukiraar- Bethalayil
3. Munbu Avar Sonnapadi Mudipatharkaaga – Ingu
Moatcham Vittu Thaalchiyulla Munnanaiyile – Bethalayil
4. Aavikalin Poattuthalaal Aananthang Kondoor – Ingu
Aakkalooda Sathathukul Aluthu Piranthaar – Bethalayil
5. Ethadaivaai Anbu Vaitha Emperumaanai – Naam
Ennamudan Poai Thuthika Yegiduvomay – Bethalayil
Piranthar Piranthar Balan – பிறந்தார் பிறந்தார் பாலன
piranthar piranthar Balan
பிறந்தார் பிறந்தார் பாலன் இயேசு பிறந்தார்
மரியாள் பெற்றெடுத்த மாதேவன்
மீட்பருக்கு மகிமையை காத்திடவே (2)
ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)
அல்லேலுயா ஹாப்பி கிறிஸ்மஸ் அல்லேலுயா (2)
தாவீதின் வேரினிலே அற்புதமாய் தவழ்ந்தார்
தவித்த உள்ளத்தையே தேற்றிடவே பிறந்தார் (2)
– பிறந்தார் பிறந்தார்
பாவத்தில் உள்ளவரை பாசமாய் மீட்க்கவே
பரலோக இராஜ்ஜியத்திலே அற்புதமாய் சேர்க்கவே
– பிறந்தார் பிறந்தார்
உன்னத தேவனானவர் உலகத்துக்கு ஒளியானவர்
இருளில் உள்ளவர்களை இன்பமாய் மீட்க பிறந்தார்
– பிறந்தார் பிறந்தார்
Kakkum Valla Meetpar – தொல்லை கஷ்டங்கள் – Thollai Kastham Vanthallum
kakkum valla meetpar
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர்
காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே
2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர்
3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்
Thollai kashtangal suzhthidum
thunbam thukam varum
inbathil thunbam nerthidum
irulaai thondrum yengum
Sothanai varum velayil
Sor kekum seviyile
parathil irundhu jayam varum
paran yennai kakka valoar
Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
kakum valla meetpar undu yenaku
undu yenaku
kaathiduvaar yendrume
Ayam irundhathu oru kaalathil
aavi kuraivalthaal
meetpar uriya belathaal
sathuruvai vendraen
yen bayam yaavum neengitru
yesu kai thoonkinaaru
mootrum yen ullam maaritru
yesu yennai kakka valoar!
Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
undu yenaku
kakum valla meetpar undu yenaku
kaathiduvaar yendrume
Yena vanthaalum nambuvaen
yen Yesar meetparai
yaar kai vittalum pin seluvaen
yenathu yesuvai
agala aala uyiramaai
yevolavu anbu kurundhaaru
yena thunbangal vaanthalum
avar yenai kai vidamaataar
Kakum valla meetpar undu yenaku
undu yenaku
undu yenaku
kaathiduvaar yendrume
Unnatharae En Nesarae – உன்னதரே
Unnatharae En Nesarae
உன்னதரே என் நேசரே-உமது
பேரன்பினால் அசைவுராதிருப்பேன்
1. முழு மனதோடு நன்றி சொல்வேன்
முகமலர்ந்த நன்றி சொல்வேன்
கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
ஆத்துமா வாழ பெலன் தந்தீரே
2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கிறீர்
துன்பத்தின் நடுவே நடந்தாலும்
துரிதமாய் என்னை உயிர்பிக்கின்றீர்
3. வலதுகரத்தால் காப்பாற்றினீர்
வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
என்றுமுள்ளது உமது அன்பு
4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
நீர்தந்த வெற்றியில் களிகூறுவேன்
மனதின் ஏக்கங்கள் மலரசெய்தீர்
வாய்விட்டு கேட்டதை மறுக்கவில்லை
Thadukki Vizhunthora – தடுக்கி விழுந்தோரை
Thadukki Vizhunthora
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையே
உமக்குத்தான் ஆராதனை
1. போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே
உம்நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே
2. உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு, குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர்
3. உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
4. அன்பு கூறும் எங்களை அரவணைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்
5. உம் அரசின் மகிமை, மாட்சிதனை
அறிவித்து மகிழ்ந்திடுவேன்
உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே
தியானித்து துதித்திடுவேன்
Ummai Naadi Theyedum Manithar – உம்மை நாடி தேடி
Ummai Naadi Theyedum Manithar
உம்மை நாடித் தேடும் மனிதர்
உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்
உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்
மன அமைதி இன்று பெறட்டும்
மகிமை மாட்சிமை, மாவேந்தன் உமக்கே
துதியும் , கனமும், தூயோனே உமக்கே
1. ஒரு நாளும் உம்மை மறவேன்
ஒரு போதும் உம்மை பிரியேன்
மறுவாழ்வு தந்த நேசர்
மணவாளன் மடியில் சாய்ந்தேன்
2. என் பார்வை சிந்தை எல்லாம்
நீர் காட்டும் பாதையில் தான்
என்சொல்லும் செயலும் எல்லாம்
உம் சித்தம் செய்வதில் தான்
3. உந்தன் வேதம் எனது உணவு
நன்றி கீதம் இரவின் கனவு
உந்தன் பாதம் போதும் எனக்கு
அதுதானே அணையா விளக்கு
4. உம்மை வருத்தும் வழியில் நடந்தால்
என்னைத் திருத்த வேண்டும் தேவா
கருத்தோடு உமது வசனம்
கற்றுத் தந்து நடத்த வேண்டும்