Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே

Yaezhaigalin Belane
ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயினிலே குளிர் நிழலே

1. கர்த்தாவே நீரே என் தேவன்
நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி
உன் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

2. தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும்போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

Karam Pidithu Vazhi Nadathum – கரம் பிடித்து வழி நடத்தும்

Karam Pidithu Vazhi Nadathum
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை
களிப்போடு துதி பாடி போற்றுவோம் – 2
ஆமென் அல்லேலூயா
1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே
இளைப்பாறச் செய்கின்றார் இயேசு
களைப்பாற்ற நீர் நிறைந்த அருவிக்கு
கர்த்தர் என்னை அழைத்துச் செல்கின்றார்
2. நாம் நடக்கும் பாதைகளைக் காட்டுவார்
நாள்தோறும் ஞானத்தாலே நிரப்புவார்
நீதியின் பாதையிலே நடத்துவார்
நிழல்போல நம் வாழ்வை தொடருவார்
3. எந்தப்பக்கம் போனாலும் உடனிருந்து
இதுதான் வழியென்றே பேசுவார்
இறுதிவரை எப்போதும் நடத்துவார்
இயேசு நாமம் வாழ்கவென்று வாழ்த்துவோம்

Yesu Nam Pinigalai – இயேசு நம் பிணிகளை

Yesu Nam Pinigalai
இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்
நம் நோய்களைச் சுமந்து கொண்டார்
1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார்
அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார்
நம்மை நலமாக்கும் தண்டனை
அவர் மேல் விழுந்தது
அவருடைய காயங்களால்
குணமடைந்தோம் – நாம்
2. கொல்வதற்காய் இழுக்கப்படும்
ஆட்டுக்குட்டியைப் போல – மயிர்
கத்திரிப்பேன் முன்னிலையில்
கத்தாத செம்மறி போல
வாய்கூட அவர் திறக்கவில்லை
தாழ்மையுடன் அதை தாங்கிக் கொண்டார்
3. நம் பாவம் அனைத்தும் அகற்றிவிட்டார்
இறைவனின் பிள்ளையாய் மாற்றிவிட்டார்
கழுமரத்தின் மீது தம் உடலில்
நம் பாவங்கள் அவர் சுமந்தார்

Yaar Pirikka Mudiyum – யார் பிரிக்க முடியும்

Yaar Pirikka Mudiyum
யார் பிடிக்க முடியும்
என் இயேசுவின் அன்பிலிருந்து
எதுதான் பிரிக்க முடியும்
என் நேசரின் அன்பிலிருந்து

1. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ

2. வியாதிகளோ வியாகுலமோ
கடன் தொல்லையோ பிரித்திடுமோ

3. கவலைகளோ கஷ்டங்களோ
நஷ்டங்களோ பிரித்திடுமோ

4. பழிச்சொல்லோ பகைமைகளோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

5. சாத்தானோ செய்வினையோ
பில்லி சூனியமோ பிரித்திடுமோ

6. உறவுகளோ உணர்வுகளோ
எதிர்ப்புகளோ பிரித்திடுமோ

Yesu Pothume – இயேசு போதுமே

Yesu Pothume
இயேசு போதுமே
எனக்கு போதுமே – 2

1. இயேசு கைவிடார் உன்னை கைவிடார்
இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார்

2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர்
இன்றும் வல்லவர் அவர் என்றும் வல்லவர்

3. இயேசு நல்லவர் எனக்கு நல்லவர்
இன்றும் நல்லவர் அவர் என்றும் நல்லவர்

4. இயேசு வாழ்கின்றார் என்னில் வாழ்கின்றார்
இன்றும் வாழ்கின்றார் அவர் என்றும் வாழ்கின்றார்

Devane En Deva – தேவனே என் தேவா

Devane En Deva
தேவனே என் தேவா
உம்மை நோக்கினேன்
தண்ணீரில்லா நிலம்போல
தாகமாய் (உமக்காய்) ஏங்கினேன்
1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
ஓடி வருகிறேன்
உம் வல்லமை மகிமை கண்டு
உலகை மறக்கின்றேன்
2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
எனக்குப் போதுமே
உதடுகளாலே துதிக்கின்றேன்
உலகை மறக்கின்றேன்
3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
உம் சிறகுகளின் நிழல்தனிலே
உலகை மறக்கின்றேன்
4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
பற்றி கொண்டது
உம் வலக்கரமோ என்னை நாளும்
தாங்கிக் கொண்டது
5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
வாழ்த்திப் பாடுவேன்
சுவையான உணவை உண்பதுபோல்
திருப்தி அடைகின்றேன்

Saronin Raja – சாரோனின் ராஜா

Saronin Raja
சாரோனின் ராஜா இவர்
பரிபூரண அழகுள்ளவர்
அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்
துணைவன் என்பேன்
இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்
கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன
1. சீயோன் வாசியே தளராதே
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
அன்பின் தேவன் மறக்கமாட்டார்
ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
2. மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மாறா தேவனின் புதுகிருபை
காலை தோறும் நமக்கு உண்டு
3. நேசரை அறியா தேசமுண்டு
பாசமாய் செல்ல யார்தானுண்டு
தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

Engal Devan Vallavare – எங்கள் தேவன்

Engal Devan Vallavare
எங்கள் தேவன் வல்லவரே
இன்றும் என்றும் காப்பவரே
வல்லவர் சர்வ வல்லவர்
நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா
1. தீயின் நடுவே நடந்தாலும்
எரிந்து போகமாட்டோம்
கடலின் நடுவே நடந்தாலும்
மூழ்கிப் போகமாட்டோம்

2. சோதனை துன்பம் சூழ்ந்தாலும்
சோர்ந்து போவதில்லை
வேதனை வியாதி நெருக்கினாலும்
வெற்றி சிலுவையுண்டு

3. அலகை அனுதினம் தாக்கினாலும்
ஆண்டவர் வார்த்தையுண்டு
உலகம் நம்மை வெறுத்தாலும்
உன்னதர் கரங்களுண்டு

Anbin Devan Yesu – அன்பின் தெய்வம்

Anbin Devan Yesu
அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன் – 2
1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல என்னில்
இயேசு வாழ்கின்றார்
2. இயேசு பேசும்போது – என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும் போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன் வெல்வேன்
அலகையை – தினம்
3. கண்ணீர் சிந்தும்போது – மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருங்கும்போது – அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் – எனக்கு

Immattum Kaivida Devan – இம்மட்டும் கைவிடா தேவன்

Immattum Kaivida Devan
இம்மட்டும் கைவிடா தேவன்
இணியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்

1. ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கின்றேன் இயேசு நாமத்தில்

2. இயேசு கிறிஸ்து வசனத்தால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ

3. கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை