பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்

பத்து குஷ்டரோகிகள் இயேசுவினிடம்
சொஸ்தமாக்க சொல்லியே சத்தமிட்டார்கள்
சத்தம் கேட்ட இயேசுவும் உள்ளம் உருகி
சொஸ்தமாகும் படிக்கு கட்டளையிட்டார்
வேண்டி கொண்ட 10 பேரும் வழி போகையில்
வியாதி நிங்கி போனதைத் தன்னில் உணர்ந்தார்
ஒருவன் உள்ளம் மட்டும் நன்றி நிறைந்து
ஓடி வந்து ஏசுபாதம் வீழ்ந்து கும்பிட்டான்

சொஸ்தமாகபட்டவர்கள் பத்து பேரல்லோ
மற்றவர்கள் எங்கே என்று இயேசு ஏங்கினார்
நன்மை செய்தே சுற்றின இயேசு உன்னிடம்
நன்றி மறவாதே நீ என்றும் என்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *