Ummai Sutri Sutri – சுற்றி சுற்றி

Ummai Sutri Sutri
உம்மை சுற்றி சுற்றி வந்தால் எனக்கு கிருபை கிடைக்குமே
உம்மை தொட்டு தொட்டு பார்த்தால்
எனக்கு சுகம் கிடைக்குமே

நீர்தானே எனக்கு நல்ல கர்த்தர்
நீர்தானே எனக்கு நல்ல மேய்ப்பர்

1. எதையெல்லாமோ சுற்றி வந்தேன் அறியாமையால்
எதையெல்லாமோ செய்தேன் ஒன்றும் புரியாததால்
கிருபையாக என்மீது அன்பு கூர்ந்து
உம்மை சுற்றிவர செய்தீரே நன்றி ஐயா .
(நீர்தானே எனக்கு ..)

2. ஊர் ஊராய் சுற்றி வந்தேன் உம்மைத்தேடி
நேர்த்திக் கடன் செலுத்தினேன் ஓடோடி
எதுவுமே தேவையில்லை என்று சொல்லி
என்னை தேடி வந்த தெய்வமே நன்றி ஐயா
(நீர்தானே எனக்கு ..)

3. எப்போதும் என்னை சுற்றி இருக்கின்றீர்
ஒருபோதும் என்னை விட்டு விலக மாட்டீர்
எனக்குள்ளே நீர் வந்து தங்கியதால்
என்னை ஆலயமாக்கிவிட்டீர் நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *