Githiyon Nee – கிதியோன் நீ

Githiyon Nee
கிதியோன் நீ கிதியோன் நீ
தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ
வாலிபனே வாலிபனே
ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா
1. உணவுக்கு போராடும் தேசத்திலே
உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே
விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை
விரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி
2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே
விக்கிரக ஆவிகளை விரட்டணுமே
கர்த்தர் மனம் இறங்க கதறணுமே
நாடு நலம்பெற ஜெபிக்கணுமே
3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு
பயமின்றி திருவசனம் அறிக்கையிடு
மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொட
புளியாத அப்பாமாக மாறிவிடு
4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோ
எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்
படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்
பராக்கிரமசாலியே பயமே வேண்டாம்

Vaikaraiyil Umakkaga – வைகரையில்

Vaikaraiyil Umakkaga
வைகரையில் (காலை நேரம்) உமக்காக
வழிமேல் விழிவைத்து
காத்திருக்கின்றேன் இறைவா
என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
பெருமூச்சைப் பார்த்து மனமிரங்கும்
1. உம்இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
நிறைவான மகிழ்ச்சி உம்சமூகத்தில்
குறைவில்லாத பேரின்பம் உம்பாதத்தில்
2. ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
உம்மையன்றி வேறுஒரு செல்வம இல்லையே
நீர்தானே எனது உரிமைச் சொத்து
எனக்குரிய பங்கு நீர்தானய்யா
3. படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர்
என்இதயம் பூரித்து துள்ளுகின்றது
என்உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது
4. உம் கிருபையால் காலைதோறும் திருப்தியாக்கும்
நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
எப்போதும் என்முன்னே நீர்தானய்யா
ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்

Ennai Belapaduthum – என்னைப் பெலப்படுத்தும்

Ennai Belapaduthum
என்னைப் பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்துவால்
எல்லாமே செய்து நான் முடித்திடுவேன்
1. கர்த்தர் என் வெளிச்சமும் எனது மீட்புமானார்
அவரே ஜீவனும் வாழ்வின் பெலனுமானார்
2. தீயோர் என் உடலை விழுங்க நெருங்கையில்
இடறிவிழுந்தார்கள் இல்லாமல் போனார்கள்
3. படையே எனக்கெதிராய் பாளையம் இறங்கினாலும்
என் நெஞ்சம் அஞ்சாது நம்பிக்கை இழக்காது
4. கேடுவரும் நாளிலே கூடாரமறைவினிலே
மறைத்து வைத்திடுவார் பாதுகாத்திடுவார்;
5. எனக்கு எதிரான மனிதர் முன்னிலையில்
என் தலை நிமிரச் செய்வார் வெற்றி காண செய்வார்
6. அப்பாவின் கூடாரத்தில் ஆனந்த பலியிடுவேன்
பாடல் பாடிடுவேன் நடனமாடிடுவேன்
7. நாட்கள் கூட கூட பெலனும் பெருகிவிடும்
இரும்பும் வெண்கலமும் பாதத்தின் கீழ் இருக்கும்

Engal Jebangal – எங்கள் ஜெபங்கள்

Engal Jebangal
எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே
1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும்
எழவேண்டும்
உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் (2)
2. பரலோக அக்கினி எங்கும் பற்றியெரிய
வேண்டும்
பாவச்செயல்கள் சுட்டெரிக்கப்பட
வேண்டும்
3. தூரம் போன ஜனங்கள் உம் அருகே
வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று காலடியில்
விழவேண்டும்
4. பாகால்கள் இந்தியாவில் இல்லாமல்
போக வேண்டும்
பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழிய வேண்டும்
5. பாரததேசத்தை ஜெபமேகம் ரூட வேண்டும்
பெரிய காற்று அடித்து பெருமழை பெய்ய
வேண்டும்

Vinnilum Mannilum – விண்ணிலும்

Vinnilum Mannilum
விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
எனக்கு யாருண்டு ? – இந்த
மண்ணுலகில் உம்மையன்றி வேற
விருப்பம் எதுவுண்டு?
நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
1. உம்மோடு தான் எப்போதும் நான்
வாழ்கிறேன்
அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
நன்றி ஐயா நாள் முழுதும்
நல்லவரே, வல்லவரே
2. உம்சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
முடிவிலே என்னை மகிமையில்
ஏற்றுக்கொள்வீர்
3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா
எனக்குரிய பங்கும் என்றும் நீர்தானய்யா
4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய்
கொண்டுள்ளேன்
உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியமே
5. எனக்குள்ளே நீர், செயலாற்றி, மகிழ்கின்றீர்
உம் சித்தம் செய்ய, ஆற்றல் தருகின்றீர்

Pugazhkindrom Ummaiye – புகழ்கின்றோம்

Pugazhkindrom Ummaiye
புகழ்கின்றோம் உம்மையே புகழ்கின்றோம்
போற்றிப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்துகிறோம் உன்னதரே உயர்த்தி மகிழ்கின்றோம்
புகழ்கின்றோம் புண்ணியரே புகழ்ந்து பாடுகின்றோம்
உம்மைப் புகழ்ந்து பாடுகின்றோம்
உயர்த்தி மகிழ்கின்றோம் (2)
1. நூற்றுவத் தலைவனை தேற்றினீரே
வார்த்தையை அனுப்பி வாழ வைத்தீர்
விசுவாசம் பெரிதென்று பாராட்டினீர்
விண்ணக விருந்தில் இடம் கொடுத்தீர்
2. கல்லறை லேகியோனை தேடிச்சென்றீர்
ஆறாயிரம் பேய்களை ஓடச்செய்தீர்
ஆடை அணிந்து அமரச் செய்தீர்
ஆர்வமாய் சாட்சி பகரச்செய்தீர்
3. பெதஸ்தா குளத்து முடவனையே
படுக்கை எடுத்து நடக்கச் செய்தீர்
இனியும் பாவம் செய்யாதே என்று
எச்சரித்தீரே தேடிச் சென்று
4. தோல்வியில் துவண்ட பேதுருவின்
படகில் ஏறி போதித்தீரே
படகு நிறைய மீன்கள் தந்தீர்
பாவநிலையை உணர வைத்தீர்
5. மரத்தில் அமர்ந்த சகேயுவை
மனமிரங்கி நோக்கினீரே
இறங்கி வாரும் என்று அழைத்து
இரட்சிப்பு தந்து மகிழச் செய்தீர்
6. பர்த்திமேயு குருடனை பார்த்தீரே
பரிசுத்தர் உம்மையே பார்க்க வைத்தீர்
உந்தன் பின்னே நடக்க வைத்தீர்
உம்மை போற்றி புகழச்செய்தீர்

En Ullamae Ellaiparidu – என் உள்ளமே

En Ullamae Ellaiparidu
என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
1. கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்த விடுவித்தார்
2. நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார்
3. எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார்
4. மன்றாடும்போது செவி சாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார்
5. விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்
விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன்
6. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்

Unnathamanavarin – உன்னதமானவர்

Unnathamanavarin
உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்
1. ஆண்டவர் எனது அடைக்கலமானார்
நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
வேடர் கண்ணிகள் கொள்ளைநோய்கள்
தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்
2. தமது சிறகால் அரவணைக்கின்றார்
இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
சத்திய வசனம் எனது கேடகம்
நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு
3. என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
பதினாயிரம் பேர்தாக்கினாலும்
பாதுகாப்பவர் என் பக்கத்திலே
பாதிப்பு இல்லையே பயமில்லையே
4. செல்லுமிடமெல்லாம் என்னைக்காக்க
தமது தூதருக்கு கட்டளையிட்டார்
பாதம் கல்லிலே மோதாமலே
கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்
5. சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்

Nandri Bali Peedam Kattuvom – நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

Nandri Bali Peedam Kattuvom
நன்றிபலிபீடம் கட்டுவோம்
நல்லதெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மைகள் ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீங்கிட கழுவி விட்டீர்
உமக்கென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர்

2. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா

3. குற்றம் செய்தால் மரித்திருந்தோம்
இயேசுவோடே கூட எழச்செய்தீர்
கிருபையினாலே இரட்சித்தீரே
உன்னதங்களிலே உட்காரச்செய்தீர்

4. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே

5. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமை சொத்தாக வைத்துக் கொண்டீர்

Nandri Bali Peedam Kattuvom
Nalla Deivam Nanmai Seythaar
Seytha Nanmaikal Aayirangal
Solli Solli Paaduvaen

Nandri Thagapanae Nanmai Seytheerae

1. Jeevan Thanthu Neer Anbukoorntheer
Paavam Neengida Kaluvi Vittir
Umakkendru Vaala Piritheduthu
Umathu Ooliyam Seiya Vaitheer

2. Paarkum Kankalai Thantheerayyaa
Paadum Uthadukal Thantheerayyaa
Ulaikum Karangalai Thantheerayyaa
Odum Kaalkalai Thantheerayyaa

3. Kuttam Seythaal Marithirunthom
Yesuvotae Kooda Elachcheytheer
Kirupaiyinaalae Iratchiththeerae
Unnathangalilae Utkaarachcheytheer

4. Puthiya Udanpaatin Adaiyaalamaai
Punitha Iratham Ootrineerae
Sathiya Jeeva Vaarthaiyaalae
Maritha Vaalvaiyae Maatrineerae

5. Irulin Athikaaram Akatrivittir
Yesu Arasukul Serthuvittir
Umakku Sonthamaai Vaangi Konndu
Urimai Sothaaka Vaithu Kondeer

Maraname Un Koor Enge – மரணமே உன் கூர்

Maraname Un Koor Enge
மரணமே உன் கூர் எங்கே ?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு

எனக்குள் வந்துவிட்டர்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்குத் தந்துவிட்டார்

1. சாவுக்கு அதிபதி சாத்தானை – இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்
பயமில்லையே மரணபயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

2. அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும்

3. இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார்

4. கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்கள் வாழ்வோர் (மரித்தோர்)
எதிர் கொண்டு சென்றிடுவோம்

5. பூமிக்குரிய கூடாரமான இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு

6. ‘அ’கரமும் ‘ன’கரமும் தொடக்கமும் முடிவும்
நான் தானே என்று சொன்னவர்
அவனவன் கிரியைக்குத் தகுந்த
பரிசு அளிக்க சீக்கிரத்தில் வருகின்றார்

Maranamae Un Koor Engae
Paathaalamae Un Jeyam Engae
Maranaththai Jeyiththa
Mannavan Yesu

Enakkul Vanthuvittar
Saavai Aliththu Aliyaa Vaalvai
Enakku Thanthu Vittar

1. Saavukku Athipathi Saaththaanai Yesu
Saavaalae Ventuvittar
Marana Payaththinaal Vaadum Manitharai
Viduviththu Meettuk Konndaar
Payamillai Marana Payamillai
Jeyameduththaar Yesu Jeyameduththaar.

2. Alivukkuriya Ivvudal Oru Naal
Aliyaamai Anninthu Kollum
Saavukkuriya Ivvudal Oru Naal
Saavaamai Anninthu Kollum

3. Iranthor Maelum Vaalvor Maelum
Aalukai Seythidavae
Yesu Mariththu Uyirththu Elunthaar
Intaikkum Jeevikkiraar

4. Kattalai Pirakka Thoothar Kural Olikka
Karththar Yesu Vanthiduvaar
Kiristhuvukkul Vaalvor
Kiristhuvukkul Mariththor
Ethirkonndu Sentiduvom

5. Poomikkuriya Koodaaramaana
Ivveedu Alinthaalum
Paraman Kattiya Nilaiyaana Veedu
Paralokaththil Unndu

6. Akaramum Nakaramum Thodakkamum Mutivum
Naan Thaanae Entu Sonnavar
Avanavan Kiriyaikkuth Thakuntha Parisu Alikka
Seekkiraththil Varukintar