Karthaavey Neer Maatchimai
கர்த்தாவே நீர் மாட்சிமை நிறைந்தவர்
உன்னதரே நீர் உயிருடன் எழுந்தவர்
நீர் எந்தன் அடைக்கலம்
நீரே என் கோட்டை
ஆபத்துக்காலத்தில் அரணும் நீர்
நீரே என் நம்பிக்கையே
1. நெருக்கடி வேளையில்
உமை அழைத்தேன்
ஓடி வந்து எனக்குதவி செய்தீர்
சோதனை நேரம் சூளும்போது
என் கரங்களை பற்றிக்கொண்டீர் (நீர் எந்தன் ….)
2. இம்மட்டும் காத்து நடத்தினீர
இனிமேலும் காத்து நடத்துவீர்
எத்தனை இடர்கள் வந்தாலும்
உம்மை நான் நம்புவேன் (நீர் எந்தன் ….)
3. மரண அலைகள் சூழ்ந்தாலும்
சூழ்நிலை பயத்தை கொடுத்தாலும்
என் ஜீவன் உந்தன் கையில்தானே
மரித்தாலும் நான் பிழைப்பேன் (நீர் எந்தன் ….)
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
நூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் இந்தியா
ஏழு லட்சம் கிராமம் உண்டு எங்கள் இந்தியா
இருபத்தெட்டு மாநிலங்கள் கொண்ட இந்தியா
அந்த இந்தியாவில் இரட்சிப்பு மலர வேண்டுமே
1. ஊழியம் செய்திடவே எழும்பிடுவோம்
திரள் திரளாய் ஆத்துமாக்கள் சேர்த்திடுவோம்
தெய்வ பக்தி கொண்ட மக்கள் இந்தியர்களே
ஜீவனுள்ள தேவனை அறியச் செய்திடுவோம்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
2. அழிகின்ற ஆத்துமாக்கள் ஏராளமே – இயேசுவை
அறியாமல் நரகம் செல்வோர் ஏராளமே
இயேசுவால் இரட்சிப்பு என்று முழங்கிடுவோம்
அவர் இரத்தத்தில் மன்னிப்பு உண்டு சொல்லிடுவோம்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
1. அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி
உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்
அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாள்களை பலப்படுத்தி
நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் – அல்லேலூயா
2. அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருப்தி ஆக்குவார்
அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருப்தி ஆக்குவார் – அல்லேலூயா
3. அவர் தம் வார்த்தைகளை பூமியிலே அனுப்புகிறார்
அவரின் சொல் மகா தீவிரமாய் செல்லுது
அவர் தம் வார்த்தைகளை பூமியிலே அனுப்புகிறார்
அவரின் சொல் மகா தீவிரமாய் செல்லுது – அல்லேலூயா
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா
இயேசுவின் இரத்தம் விடுதலை
இயேசுவின் இரத்தம் அது ஜெயம்
இயேசுவின் இரத்தம் சாவை வெல்லும்
இயேசுவின் இரத்தம் அதிசயம்
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா
இயேசுவே எந்தன் பரிகாரி
இயேசுவே எந்தன் வல்ல மீட்பர்
இயேசுவே எந்தன் மகா ராஜா
இயேசுவே எந்தன் மேய்ப்பர் அவர்
நீர் எந்தன் கன்மலை, நீர் எந்தன் கோட்டை
நீர் எந்தன் இரட்சகர் காருண்ய தேவனே
நீர் எந்தன் அடைக்கலம், நீர் எந்தன் கேடகம்
நீரே என் தேவன் துதிக்குப் பாத்திரர் – அல்லேலூயா