Mulmudi Paaramo Thevane – முள்முடி பாரமோ தேவனே

Mulmudi Paaramo Thevane

முள்முடி பாரமோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவை யாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதரே

தோளிலே சிலுவையை சுமக்கிறீர்
தோள்களும் தாங்குதோ அப்பனே
முட்களும் கால்களில் குத்துதோ
முட்களைப் படைத்தவர் நீர் அன்றோ

கைகளில் ஆணியா குத்தினர்
களைக்குதோ கைகளும் இயேசுவே
சாட்டையால் முதுகினில் அடித்தனர்
சாட்டையும் ராஜனை அடித்ததோ

காடியா தாகத்துக்கு தந்தனர்
தண்ணீரைப் படைத்தவர் நீரன்றோ
கண்ணீரும் கண்களில் கொட்டுதோ
துடைப்பவர் யாருமே இல்லையோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *