Siluvai Sumantha Uruvam – சிலுவை சுமந்த உருவம்

Siluvai Sumantha Uruvam
சிலுவை சுமந்த உருவம் (கிறிஸ்து)
சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே
நம்பியே இயேசுவண்டை வா

1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா………

2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்
உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே

3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார்

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்

5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்

6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்
கர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்

Siluvai Sumandha Uruvam(Kiristhu)
Sindhina Rattham Purandoadiyae
Nadhi Poalavae Poagindradhae
Nambiyae Yesuvandai Vaa

1. Pollaa Ulaga Sitrinbangal Ellaam Azhiyum Maayai – 2
Kaanaai Nilaiyaana Sandhoasham Poovinil Kartthaavin Anbandai Vaa – 2

2. Aatthuma Meetpai Pettridaamal Aathmaa Nashtam Adaindhaal – 2
Ulagam Muzhuvadhum Aadhaayam Aakkiyum Laabam Ondrum Illaiyae – 2

3. Paava Manithar Jaadigallai Pasamai Mitka Vandaar – 2
Paava Parigari Karthar Yesunathar Pavam Ellam Sumandar – 2

4. Nithya Jeevan Vangipayo Nithiya Motchavallvil – 2
Thedi Vaarayo Parisutha Jeeviyam Thevai Athai Adaivai – 2

5. Taagam Adainthor Ellorume Tagathai Tirkevarum – 2
Jeeva Tanerane Karthar Yesu Nathar Jeevan Unakaalipaar- 2

6. Undhan Belatthil Vaazhndhidaadhae Nimmadhi Nee Izhappaai – 2
Karttharae Thanjam Endru Nee Vandhu Vittaal Nimmadhi Peruvaai – 2

Abishegam Petravan Simsoon – அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்

Abishegam Petravan Simsoon
அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong…(4)

அழைக்கபட்டவன் யூதாஸ் (3)
விழுந்து போனானே எப்படி?
Something Somewhere Wrong…(4)

Iife என்னும் track ல
ஓடுகின்ற race ல
Cycle Gap ல
பாவம் வந்தது காத்துல
அப்பாலே போனு சொல்லல
கர்த்தர் பயமும் தோணல
இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல
Life ல இருந்த Peace போச்சு
Face ல இருந்த Color போச்சு
இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி
இப்போவே உனக்கு Choice இருக்கு
இயேசு என்னும் Guide இருக்கு
பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா
உன்ன பாத்து பாடுவேன்
Something Somewhere Wrong… (4)

Yaar Ennai Pirikakoodum – யார் என்னை பிரிக்க கூடும்

Yaar Ennai Pirikakoodum
யார் என்னை பிரிக்க கூடும்(2)
பொன்னோ பொருளோ
உயர்வோ தாழ்வோ
பசியோ பட்டினியோ
எது தான் பிரிக்க கூடும்(2)

1. உந்தன் அன்பை ருசிக்கும் முன்னே
உலக அன்புக்காய் ஏங்கினேன்
உந்தன் அன்பை ருசித்த பிறகு
உமக்காய் பைத்தியமாய் மாறினேன் (3)

2. சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்து
உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
என்ன ஆனாலும் எது நடந்தாலும்
உமக்காய் என்றும் நான் வாழுவேன் (3)

Parisutharai Parkanum – பரிசுத்தரை பார்க்கணும்

Parisutharai Parkanum
பரிசுத்தரை பார்க்கணும்
நான் உம்மை பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உம் பாதம் அமர்ந்து
உம்மை போல் மாறணும்

1. பலப்பல பாவங்கள் எனை சூழும் போது
எனை பாதுகாத்து நடத்துமையா
உம்மை விட்டு விலகி போக கொஞ்சம் கூட மனசு இல்ல
மார்பில் என்னை மூடும்மையா

2. குற்றமற்ற வாழ்கையாய் இவ்வுலகில் சாட்சியாய்
என்னை மாற்றும் எந்தன் சுத்த தெய்வமே
என் வாழ்வின் மூலமாய்
உங்க நாமம் கனமடைய
என்னை பயன்படுத்தும் திவ்ய நாதனே -2

Sunabu Adicha Kalarai – சுண்ணாம்பு அடிச்ச கல்லறை

Sunabu Adicha Kalarai
சுண்ணாம்பு அடிச்ச கல்லறை
ஏன் கேட்குற சில்லறை
பணத்துக்காக ஏங்குற
அதுக்குத்தான் பல்ல காட்டுற
Money is your teaching
Money is your preaching
Stop this Preaching
Where is the Reaching

பணம் பேர சொன்னாலே பொணம் கூட எந்திச்சிகுஈயா
உலகில் எல்லா பாவத்துக்கு பணம் தானே ரூட்டு ஐயா
இந்த பாழா பணத்தினாலே நல்ல குணம் போச்சிய்யா-2

பொருள நம்பி போன அந்த லோத்து கதி பாருமைய்யா
சுத்தத்தை நம்பி வந்த யோசேப்போல மாறும்மைய்யா
பரிசுத்தம் தானே உன்ன பரலோகம் சேர்க்குமைய்யா

Ulagile Uravile Engum – உலகிலே உறவிலே எங்குமே

Ulagile Uravile Engum
உலகிலே உறவிலே எங்குமே நான் பாக்கல
உம்மை போல அன்பு எங்குமே கிடைக்கல
தாயை போல அல்ல அதை காட்டிலும் மேல
தந்தை போல அதை காட்டிலும் மேல

1. காலம் காலமாய் மனிதன் மாறுறான்
எந்த காலமானாலும் நீங்க மாறல-2
முகத்தை பாத்துதான் மனிதன் எடை போடுறான் என்னை
முகத்தை பாத்துதான் உலகம் எடை போடுது
உள்ளத்தை பாத்து என்னை நேசித்தீரய்யா -2

2. செல்வ ஞானமோ என்னில் இல்லையே
பதவி பட்டமோ எதுவும் இல்லையே -2
ஏழைகளை ஒதுக்கினதோ இந்த உலகம் -2
ஏழைகளை அழைத்ததோ இயேசு தெய்வம்-2

Maname Maname Nee – மனமே மனமே நீ

Maname Maname Nee
மனமே மனமே நீ ஏன் கலங்குகிறாய்
உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
நீ ஏன் பதறுகிறாய்

மரணத்தை ஜெயித்தவர் உயிரோடு எழுந்தவர்
நீர் வல்லமையுள்ளவரே
உனக்குள்ளே இருப்பவர் என்றும் பெரியவர்
நீர் நல்லவர் நல்லவரே

1. யகோவா எல்ஷடாய் சர்வ வல்லவரே
யகோவா எல்ரோயி என்னை காண்பவரே -2
யகோவா நிசியே வெற்றி தரும் தெய்வமே
நீர் என்றும் உயர்ந்தவரே
யகோவா ஷம்மா சமாதான தெய்வமே
நீர் என்றும் பெரியவரே-2

2. என்னுயிர் நேசமே லீலி புஷ்பமே
உந்தன் பாசமே எனக்கு போதுமே-2
அழகில் சிறந்தவர் மென்மையானவர்
என்னை ஆளுகை செய்பவரே
என் ஆத்தும நேசரே எந்தன் இரட்சகரே
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே -2

Anbu Illa Ulaginilae – அன்பு இல்லா உலகினிலே

Anbu Illa Ulaginilae
அன்பு இல்லா உலகினிலே
அன்பை காட்ட வந்தீரே
உண்மை இல்லா உலகினிலே
உண்மை சொல்ல வந்தீரே
என் மேல் அன்பு கூர்ந்ததால்
உம் உயிரை தந்தீரே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

மழையை பார்த்தேன்
மேகத்தை பார்த்தேன்
உம் மகிமையை பார்க்க வேண்டுமே
வல்லமை பார்த்தேன்
உம் கரத்தை பார்த்தேன்
உம் சத்தத்தை கேட்க வேண்டுமே -2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

வெறுமையாய் வந்தேன்
வெறுமையாய் போவேன்
என்னோடு எதுவும் வருவதில்லையே
உம்மோடு இருக்கணும்
உமக்காய் வாழணும்
என் உள்ளமெல்லாம் துடிக்குதைய்யா-2
ஆராதனை உமக்கு ஆராதனை -2

O Mister Kollaikaraa – ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா

O Mister Kollaikaran
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் கொள்ளைக்காரா
ஓ மிஸ்டர் சண்டைக்காரா
ஓ மிஸ்டர் பொண்ணு பைத்தியம்
ஓ மிஸ்டர் பண பைத்தியம்
இயேசப்பா வர போறாரு
நியாயந்தீர்க்க வர போறாரு
இன்றைக்கே மனம் திரும்பு
இயேசுவை நீ விரும்பு

ஒளி ஒரு பக்கம் இழுக்கிறது
இருள் ஒரு பக்கம் தடுக்கிறது
நாளை நாளை என்று சொல்லாதே
நாளை என்ன ஆகும் தெரியாதே

வீட்டில் ஒரு வேஷம் தான்
வெளிய ஒரு வேஷம் தான்
இனி வேஷம் போட முடியாதே
மாட்டிகிட்டு நீ முழிக்காதே

Devakumara Ketkiratha – தேவகுமாரா கேட்கிறதா

Devakumara Ketkiratha
தேவகுமாரா கேட்கிறதா என் தியான கீதம் கேட்கிறதா
இமைகள் திறந்து உந்தன் கண்கள் என்னை மட்டும் பார்க்கிறதா

1. உம்மைக் காண விழி கொடுத்தாய்
உம்மைப் பாட மொழி கொடுத்தாய்
பயணம் போக வழி கொடுத்தாய்
பாதை எங்கும் ஒளி கொடுத்தாய்
உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்

2. கண்ணீர் வெள்ளாம் பெருகினது கர்த்தர் பாதம் தொடுகிறது
என்னைப்போல ஆலயத்தில் மெழுகுவர்த்தி அழுகிறது உம்மை நினைத்தே உருகி விட்டேன்
என்னை உமக்கே கொடுத்து விட்டேன்
உமக்கே என்னை கொடுத்து விட்டேன்