Parisutha Janamaai Ennaiyum – பரிசுத்த ஜனமாய் என்னையும்

Parisutha Janamaai Ennaiyum
பரிசுத்த ஜனமாய் என்னையும் தெரிந்தெடுத்தீர்
எல்லா ஜனம் பார்க்கிலும் சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

பாடுவேன் நான் இயேசுவையே
துதிப்பேன் நான் தேவனையே (2)

என்னோடு பாடுங்கள் அல்லேலுயா
எல்லோரும் பாடுவோம் அல்லேலுயா அல்லேலுயா (2)

இயேசுவே என் புகழ்ச்சி
என் உள்ளத்தின் மகிழ்ச்சி
இகழப்பட்ட என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

கீர்த்தியும் புகழ்ச்சியும்
உண்டாகச்செய்வீர் நிச்சயம்
நீதிமானாய் என்னையும்
சிறந்திருக்கப்பண்ணுவீர் (2)

மகிபனின் புகழையே
அனுதினம் நான் பாடுவேன்
மகிமையாய் என்னையும்
ஜொலித்திருக்கப்பண்ணுவீர் (2)

Immaanuvel Immaanuvel Ennodu – இம்மானுவேல் இம்மானுவேல் என்னோடு

Immaanuvel Immaanuvel Ennodu

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை எப்போதும் நடத்திடுவீர் – (2)

1.தேவரீர் என்னை ஆசிர்வதித்து
என் எல்லையை பெரிதாக்கும்
உமது கரம் என்னோடிருந்து
தீங்குக்கு விலகிவிடும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
தீங்குக்கு விலகிவிட்டீர்

2.வெட்கத்திற்கு பதிலாக
பிழைக்கவே பிழைக்க செய்யும்
உம் வார்த்தையாலே பிழைக்கச்செய்து உயரவே
எழும்பச்செய்யும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
உயரவே எழும்பச்செய்தீர்

3.என் சமூகம் உன்னக்கு முன்பாய்
செல்லும் என்றீரே
சர்வ வல்ல தேவன் என்னை
உம் கிருபையால் காத்துக்கொள்ளும்

இம்மானுவேல் இம்மானுவேல்
என்னோடு இருப்பவரே
சர்வ வல்ல தேவன் என்னை
உம் கிருபையால் காத்துக்கொண்டீர்

Theengai Kaanaathirupaai – தீங்கை காணாதிருப்பாய்

Theengai Kaanaathirupaai
தீங்கை காணாதிருப்பாய் – 4
என் மகனே என் மகளே – இனி – 2
தீங்கை காணாதிருப்பாய் – 4

அல்லேலுயா அல்லேலுயா என்றே பாடிடு
இயேசு என்ற நாமத்தை துதித்துப் பாடிடு – உன்
தீமைகள் நன்மையாய் மாறிடும் – 2 – தீங்கை

1. தீமைகள் தேசத்தில் பெருகிடும்
வறுமைகள் வியாதிகள் தாக்கிடும்
வல்லவர் இயேசுவின் கரங்களே
தீமையை விலக்கியே காத்திடுமே – உன் – தீங்கை

2. பொல்லாத மனிதர்கள் எழும்பிடுவார்
உனக்கு தீமைகள் செய்ய பதிவிருப்பார்
உலகத்தை ஜெயித்த நம் இயேசு
பொல்லாத மனிதரைக் கலங்கடிப்பார் – தீங்கை

3. எதிராக சாத்தான் எழும்பிடுவான்
உனக்கு தீங்குசெய்ய எத்தனிப்பான்
சாத்தானின் தலையை மிதித்தவர்
சத்துரு சேனையை சிதறடிப்பார் – தீங்கை

Puthiya Naalukkul Ennai Nadathum – புதிய நாளுக்குள் என்னை நடத்தும்

Puthiya Naalukkul Ennai Nadathum

புதிய நாளுக்குள்(ஆண்டுக்குள்) என்னை நடத்தும்
புதிய கிருபையால் என்னை நிரப்பும்
புது கிருபை தாரும் தேவா
புது பெலனை தாரும் தேவா

ஆரம்பம் அற்பமானாலும்
முடிவு சம்பூர்ணமாம்
குறைவுகள் நிறைவாகட்டும் – எல்லாம்
வறட்சி செழிப்பாகட்டும் – என்

வெட்கத்திற்கு பதிலாக
(இரட்டிப்பு) நன்மை தாரும் தேவா
கண்ணீருக்குப் பதிலாக – எந்தன்
களிப்பைத் தாரும் தேவா – ஆனந்த

சவால்கள் சந்தித்திட
(இன்று) உலகத்தில் ஜெயமெடுக்க
உறவுகள் சீர்பொருந்த – குடும்ப
சமாதானம் நான் பெற்றிட – மனதில்

Puthiya Naalukkul(Andukul) Ennai Nadathum
Puthiya Kirubaiyaal Ennai Nirapum
Puthu Kirubai Thaarum Devaa
Puthu Belanai Thaarum Devaa

Aarampam Arpamaanaalum
Mudivu Sampoornamaam
Kuraivukal Niraivaakattum – Ellaam
Varatchi Selippaakattum – En

Vetkathirku Pathilaaka
(Iratchippu) Nanmai Thaarum Devaa
Kanneeruku Pathilaaka – Enthan
Kalipai Thaarum Devaa – Aanantha

Savaalkal Santhithida
(Indru) Ulakathil Jeyamedukka
Uravukal Seerporuntha – Kudumpa
Samaathaanam Naan Pettida – Manathil

Neer Oruvare Neer Oruvare – நீர் ஒருவரே நீர் ஒருவரே

Neer Oruvare Neer Oruvare
நீர் ஒருவரே (3) துதிக்குப் பாத்திரர்
நீர் ஒருவரே (3) கனத்துக்குப் பாத்திரர்

உம்மை ஆராதிப்பேன் (4)
நீரே துதிக்குப் பாத்திரர்
நீரே கனத்துக்குப் பாத்திரர்
நீரே மகிமைக்குப் பாத்திரர்
இயேசுவே(2)

1. துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
தூதர்களால் போற்றப்படும் தூய தேவனே
அகிலத்தையும் படைத்த தேவன் ஒருவரே
துதி கன மகிமை எல்லாம் உமக்குத்தானே
(உம்மை ஆராதிப்பேன் …)
2. ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
என்றென்றும் ஜீவிக்கின்ற ஜீவ தேவனே
ராஜாதி ராஜாவாய் நீர் வரப்போகிறீர்
மகிமையின் சாயலாய் எம்மை மாற்றப்போகிறீர்
(உம்மை ஆராதிப்பேன் …)
3. பரலோகம் செல்லும் வழியை அறிந்தவர் நீர்தானே
பரிசுத்தமாய் வாழ எம்மை அழைத்தவரே
பாவியை பரிசுத்தனாய் மாற்றும் தெய்வமே
ஆதியும், அந்தமுமாய் இருப்பவரே
(உம்மை ஆராதிப்பேன் …)

Ennai Kaakum Karthar – எனைக்காக்கும் கர்த்தர்

Ennai Kaakum Karthar

எனைக்காக்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எனைத்தாங்கும் கர்த்தர் நீர் தானே ஐயா
எல்லாமே நீர்தானய்யா (2) என்

1. வனாந்திர பாதைகளில் தனித்து அலைந்தபோது
பாதை காட்டும் தூதனாக முன் நடந்து சென்றீர்
தேவைகள் எல்லாம் பெருகின போதும்
என் தேவைகள் எல்லாம் சந்தித்தீரே
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

2. பாரங்கள் தாங்காது தவித்து நின்றபோது
என் பாரங்கள் எல்லாம் நீர் சுமந்து கொண்டீர்
நம்பினோர் எல்லாம் கைவிட்டபோதும்
என் நம்பிக்கை நீரே என்றறியச்செய்தீர்
நீர் இல்லாமல் ஒன்றும் முடியாது ஐயா
நீர் இல்லாமல் ஒன்றும் தெரியாது ஐயா
(எல்லாமே நீர்தானய்யா (2) என்)

Sarva Valla Devan Piranthar – சர்வ வல்ல தேவன் பிறந்தார்

Sarva Valla Devan Piranthar
சர்வ வல்ல தேவன் பிறந்தார்
மனுகுலம் மீட்க மன்னன் பிறந்தார்
இயேசு பிறந்தார் ராஜன் பிறந்தார்
மானிடரை மீட்க மீட்பர் பிறந்தார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

வறுமையை விரட்டிட வள்ளல் பிறந்தார்
வெற்றியைத் தந்திடும் வேந்தன் பிறந்தார்
சாபங்கள் நீக்கும் சுத்தர் பிறந்தார்
சமாதானம் அருளூம் அண்ணல் பிறந்தார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

அபிஷேகம் அளித்திட அன்பர் பிறந்தார்
வரங்களை வழங்கிடும் வின்னர் பிறந்தார்
நித்திய ஜீவன் தரும் நாதன் பிறந்தார்
தம்முடன் கொண்டு செல்ல மீண்டும் வருவார்

HA HA HA HALLELUJAH
HO HO HO HOSANNA – 2

Irul Soolnthidum Paathaigalil | இருள் சூழ்ந்திடும் பாதைகளில்

Irul Soolnthidum Paathaigalil

இருள் சூழ்ந்திடும் பாதைகளில்
மனம் நொறுங்கிடும் வேளைகளில்

அருகில் வருவார் கிருபை தருவார்
யாருமில்லை இவர்போல் ஒருவர்

1. எல்லா பாரங்களும் சுமப்பார்
என்றும் தாங்கியே நடத்திடுவார்
கர்த்தர் தம் கரத்தால் கண்ணீரை துடைப்பார்
காத்து நடத்துவார் என்னை நித்தம் (2)

2. எத்தனை நல்லவர் என் இயேசு
இவ்வுலகில் ருசித்தறிவேன்
இதை அறிந்ததினால் கடைசி வரையில்
இனி எனக்கென்றும் நீர் போதுமே (2)

3. எந்தன் அடைக்கலமும் பெலனும்
எனக்கேற்ற எந்தன் துணையும்
எந்த ஆபத்திலும் எந்த நேரத்திலும்
எனகென்றும் துணை அவரே (2) (…அருகில் வருவார்)

Nadathina Vitham Ninanithaal – நடத்தின விதம் நினைத்தால் நன்றி

Nadathina Vitham Ninanithaal
நடத்தின விதம் நினைத்தால் நன்றி சொல்லாமல் இருப்பேனோ (2)

கடந்து வந்த பாதை எல்லாம் கரம் பற்றி நடத்தினீரே (2) கண்ணீர் துடைத்து என் கவலைகள் நீக்கி (2) (நடத்தின)

வாழ்க்கை என்னும் ஓடத்திலே தனிமையில் சென்ற போது (2) தைரியம் தந்து உன் வசனம் தந்து (2) துக்கங்கள் நேர்ந்தபோது நொறுங்குண்டு அழுதபோது (2) மார்போடு அனணத்து ஆறுதல் தந்து (2) (நடத்தின)

Shoonya Se Leke Tune – शून्य से लेके तूने मुझे

Shoonya Se Leke Tune
शून्य से लेके तूने मुझे
रच लिया अपने ही रूप में
प्रेम किया है अनंत प्रेम से
दिया पुत्र मेरी मुक्ति के लिये

अनोखा प्यार है तेरा
करूँगा स्तुति तेरी मैं सर्वदा

जग में आया यीशु स्वर्ग छोड़ के,
मेरा सारा दंड सह लिया उसने
कोड़े खाके क्रूस उठा के यीशु ने,
मुझको मुक्ति और चंगाई दे दी है,

अन्न वस्त्र और सभी आशीषें
दी मुझे उसने भरपूरी से
खतरों और मुसीबतों से
आँख की पुतली जैसे संभाला मुझे

Shoonya Se Leke Tune Mujhe
Rach Liya Apne Hi Roop Mein
Prem Kiya Hai Anant Prem Se
Diya Putra Meri Mukti Ke Liye

Anokha Pyar Hai Tera
Karoonga Stuti Teri Main Sarvada

Jag Mei Aaya Yeshu Swarg Chod Ke
Mera Saara Dand Seh Liya Usne
Kode Kha Ke Krus Utha Ke Yeshu Ne
Mujhko Mukti Aur Changayee De Di Hai

Anokha Pyar Hai Tera
Karoonga Stuti Teri Main Sarvada

Anna Vastra Aur Sabhi Ashishe
Di Mujhe Usne Bharpoori Se
Khatro Aur Sab Musibato Se
Aankh Ki Putli Jaise Sambhala Mujhe

Anokha Pyar Hai Tera
Karoonga Stuti Teri Main Sarvada