Song Tags: Christmas Tamil Song

Mei Bhakathara – மெய் பக்தரே நீர்

Mei Bhakathara
1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,
சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;
இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,
விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;
கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,
ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார்

2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கே
இம்மானுவேல் தாவீதின் ஊரிலே
பூலோக மீட்பராகப் பிறந்தார்,
எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்
என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கே
இராவில் தோன்றி மொழிந்திட்டானே

3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,
ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்து
விண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்
மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,
என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்
தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார்

4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் ஊருக்கு
அற்புத காட்சி காண விரைந்து,
யோசேப்புடன் தாய் மரியாளையும்
முன்னணைமீது தெய்வ சேயையும்
கண்டே, தெய்வன்பை எண்ணிப் போற்றினார்,
ஆனந்தமாய் தம் மந்தைக்கேகினார்

5. கெட்டுப்போனோரை மீட்ட நேசமாம்
உன்னத அன்பைச் சிந்தை செய்வோம் நாம்;
தம்ஜென்மமுதல் சாவுமட்டுக்கும்
அப்பாலன் செய்த தெய்வ வாழ்க்கையும்
அன்போடு தியானம் செய்து வருவோம்,
நம் மீட்பர்பின்னே செல்ல நாடுவோம்

6. அப்போது வான சேனைபோல் நாமும்
சங்கீதம் பாடலாம் எக்காலமும்;
இந்தக் கெம்பீர நாள் பிறந்தவர்
அந்நாள் நம்மேல் தம் ஜோதி வீசுவார்;
நம் ராயன் அன்பால் ரட்சிப் படைந்தோம்;
அவரின் நித்திய துதி பாடுவோம்

Nadu Kulir Kalam – நடுக் குளிர் காலம்

Nadu Kulir Kalam
1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்
பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்,
மூடுபனி ராவில் பெய்து மூடவே;
நடுக் குளிர் காலம் முன்னாளே

2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே,
அவர்முன் நில்லாது அவை நீங்குமே;
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே

3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு,
மாதா பால் புல் தாவும் போதுமானது;
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே

4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்,
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்

5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்;
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்

Piranthar Or Palagan – பிறந்தார் ஓர் பாலகன்

Piranthar Or Palagan
1. பிறந்தார் ஓர் பாலகன்
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.

2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்;
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்

3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே;
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே

4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே

5. ஆதி அந்தம் அவரே
ஆர்ப்பரிப்போம் நாமே
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே

Yesu Balanai Piranthar – இயேசு பாலனாய் பிறந்தார்

Yesu Balanai Piranthar

இயேசு பாலனாய் பிறந்தார்
இயேசு தேவனே பெத்லகேமிலே
ஏழைக் கோலமாய் முன்னணை
புல்லணை மீதிலே பிறந்தார்

1. உன்னதத்தில் தேவ மகிமை
பூமியிலே சமாதானமும்
மானிடரில் பிரியம் உண்டாவதாக
என்று தேவ தூதர் பாடிட – இயேசு

2. விண்ணை வெறுத்த இம்மானுவேல்
விந்தை மானிடவதாரமாய்த்
தன்னைப் பலியாகத் தந்த ஒளி இவர்
தம்மை பணிந்திடுவோம் வாரும் – இயேசு

3. ஓடி அலைந்திடும் பாவியைத்
தேடி அழைக்கும் இப்பாலகன்
பாவங்களின் நாசர் பாவிகளின் நேசர்
பாதம் பணிந்திடுவோம் வாரும் – இயேசு

4. கைகள் கட்டின தேவாலயம்
கர்த்தர் தங்கும் இடமாகுமோ
நம் இதயமதில் இயேசு பிறந்திட
நம்மை அளித்திடுவோம் வாரும் – இயேசு

5. அன்பின் சொரூபி இப்பாலனே
அண்டி வருவோரின் தஞ்சமே
ஆறுதல் அளித்து அல்லல் அகற்றிடும்
ஆண்டவரை பணிவோம் வாரும் – இயேசு

Piranthar Piranthar – பிறந்தார் பிறந்தார் வானவர்

பிறந்தார் பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்

1. மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்

2. பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்
மா ஜோதியாய்த் திகழ்ந்தார்

3. பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினால்
மேலான நாமம் பெற்றோர்

4. கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்

5. குருவைத் தொடரும் சீஷர்களும்
குருபோல மாறிடுவார்
அவர் நாமம் தரித்தவர் யாவருமே
அவர் பாதையில் நடப்போம்

6. இயேசு பிறந்தார் உள்ளமதில்
இதை எங்கும் சாற்றிடுவோம்
புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல
பரன் ஆவியில் மகிழ்வோம்

Yesu Manidanaai Piranthar – இயேசு மானிடனாய்ப் பிறந்தார்

Yesu Manidanaai Piranthar
இயேசு மானிடனாய்ப் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில் உதித்தார்
இந்த நற்செய்தி சாற்றிடுவோம்

1. மேய்ப்பர்கள் இராவினிலே – தங்கள்
மந்தையாய் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனை துதித்தனரே – இயேசு

2. ஆலொசனைக் கர்த்தரே இவர்
அற்புத மானவரே
விண் சமாதான பிரபு சர்வ
வல்லவர் பிறந்தனரே – இயேசு

3. மாட்டுத்தொழுவத்திலே – பரன்
முன்னிலையில் பிறந்தார்
தாழ்மையை பின் பற்றுவோம் – அவர்
ஏழையின் பாதையிலே – இயேசு

4. பொன் பொருள் தூபவர்க்கம் – வெள்ளை
போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே – வான
சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு

5. அன்னாளும் ஆலயத்தில் அன்று
ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே – கூறி
தூயனை புகழ்ந்தனளே – இயேசு

6. யாக்கோபிள் ஓர் நட்சத்திரம் – இவர்
வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே நம்மை
விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு

Yesu Manidanaai Piranthar
Indha lohathai meettidavae
Iravaian Oliyai Irulil Uthithaar
Indha Narcheithi Satriduvoam

1. Meipparhal Iravinilae – Thangal
Madhaiyai Kathirukka
Vanathilae thoendri
Thevani Thuthithanarae – Yesu

2. Alosanai Kartharae Ivar
Arputha Manavarae
Vin Samathana Pirabhu Sarva
Vallavar Pirandhanarae – Yesu

3. Mattu Thozhyvathilae – Paran
Munnilaiyil Pirandhar
Thazhmaiyai Pin Patruvoam – Avar
Aezhaiyin Pathaiyilae – Yesu

Krishthore Ellorum Kalikoornthu Paadi – கிறிஸ்தோரே எல்லாரும்

Krishthore Ellorum Kalikoornthu Paadi
1. கிறிஸ்தோரே எல்லாரும்
களிகூர்ந்து பாடி
ஓ பெத்லெகேம் ஊருக்கு வாருங்கள்
தூதரின் ராஜா
மீட்பராய்ப் பிறந்தார்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

2. மகத்துவ ராஜா,
சேனையின் கர்த்தாவே,
அநாதி பிறந்த மா ஆண்டவா;
முன்னணை தானோ
உமக்கேற்கும் தொட்டில்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

3. விண் மண்ணிலும் கர்த்தர்
கனம் பெற்றோர் என்று
தூதாக்களே பாக்கியவான்களே
ஏகமாய்ப் பாடி
போற்றி துதியுங்கள்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

4. அநாதி பிதாவின்
வார்த்தையான கிறிஸ்தே!
நீர் மாமிசமாகி இந்நாளிலே
ஜென்மித்தீர் என்று
உம்மை ஸ்தோத்திரிப்போம்
நமஸ்கரிப்போமாக (3)
கர்த்தாவை

Oppillaa Nalmeetpare – ஒப்பில்லா நல் மீட்பரே

Oppillaa Nalmeetpare
ஒப்பில்லா நல் மீட்பரே இப்பூமி மீதினிலே
அற்புத பாலனாய் தற்பரன் சொற்படி
தாரணி வந்ததால் பாடி மகிழ்வோம் -2

1. காரிருள் வேளைதனில் கடும்பனி சாரல் தனில்
பார்தல மீட்பை எண்ணி பரமன் பிறந்து விட்டார் – ஒப்பில்லா

2. ஆரிரோ என்று பாட யாருமே அங்கு இல்லை
ஏரோது மனம் கலங்க ஏகபரண் பிறந்தார் – ஒப்பில்லா

3. தம்மைப் போல் நம்மை மாற்ற தாரணி வந்தவர்க்காய்
நம்மை நாம் இன்றளிப்போம் நாதன் வழி நடப்போம் – ஒப்பில்லா

Oppillaa nal meetparae ippoomi meethinilae
Arpudha paalanaay tharparan sorpadi
Thaarani vandhdthaal paadi magizhvoam -2

1. Kaarirul vaelaidhanil kadumpani saaral thanil
Paarthala meetpai enni paraman pirandhu vittaar – Oppillaa

2. Aariroa endru paada yaarumae angu illai
Aerodhu manam kalanga aegaparan pirandhaar – Oppillaa

3. Thammai poal nammai maatra thaarani vandhavarkkaai
Nammai naam indralippoam naadhan vazhi nadappoam – Oppillaa

Mesiyaa Thaan Porandhaachu – மேசியா தான் பொறந்தாச்சு

Mesiyaa Thaan Porandhaachu
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

1. பசியைப் போக்கி நன்மையால் நிரப்பிடவே
பெலவானை ஆசனம் விட்டு தள்ளி விடவே (2)
தாழ்வில் உள்ள நம்மையே உயர்த்திட வந்தாரே
தரணியின் பாவம் போக்க தாழ்த்தினாரே தன்னையே
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி ஆட்டம் ஆடு -2
மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)

2. பகைமை நீங்கி அன்பினாலே ஒன்றாய் இணைவோம்
பாலன் பிறந்த நோக்கம் தனை வாழ்வில் காட்டுவோம் (2)
பரிசுத்தம் பெற்றிடாத ஆன்மக்கள் அழியாமல்
பாலன் பிறந்த நல்ல செய்தி பாரெங்கும் கூறுவோம்
டும் டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி கூறிடுவோம் -2

மேசியா தான் பொறந்தாச்சு
மானிடரே மகிழ்ந்திடுங்க (2)
மனிதர் நம்மை மீட்க
மேன்மை யாவும் துறந்தார் (2)
மகிழ்ச்சியின் பண்டிகையை
ஆனந்தமாய் கொண்டாடுவோம் (2)

ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஓஹோஹோ
ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாஹாஹா
ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)

Piranthar Piranthar Kiristhu – பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து

Piranthar Piranthar Kiristhu
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க
பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
வின்னிலும் மன்னிலும் வெற்றி முழங்க

1. மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்
மன்னில் சமாதானம் வின்னில் மகிழ்ச்சி
என்றென்றும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் – பிறந்தார்

2. தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார்
தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
என்னாளும் அதிர நம் இயேசு பிறந்தார் – பிறந்தார்

2. மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள்
மாந்தர் யாவரும் போற்றிப்பாடுங்கள்
இராஜன் இயேசுவை வாழ்திப்பாடுங்கள் – பிறந்தார்

For song Piranthar Piranthar Vanavar