Kadantha Naatkalil Nadathineerae
கடந்த நாட்களில் நடத்தினீரே
கண்மணிபோல் என்னை காத்தீரே (2)
என் இயேசுவே நான் உம்மை துதிப்பேன்
என் தேவனே நான் உம்மை பாடுவேன் (2)
1.புது ஜீவன் தந்தீரே
எனக்கு புதுவாழ்வு அளித்தீரே
புது பெலன் தந்தீரே
என்னை புதுமையாய் நடத்தினீரே – என் இயேசுவே
2.கவலைப்படுவதினால் ஒரு முழமும் கூட்டமுடியாதே
கண்ணீர் விடுவதினால்
உன் துன்பங்கள் விலகிடாதே – என் இயேசுவே
3.எரிகோவை இடித்தவரே
எகிப்தை வென்றவரே
எனக்குள்ளே இருப்பவரே
வெற்றியை தருபவரே – என் இயேசுவே
4. மகிழ்ச்சியின் தொனியோடே
ஆர்ப்பரித்து முழங்கிடுவேன்
கர்த்தரை ஆராதித்து
அவர் நாமத்தை உயர்த்திடுவேன் – என்
இயேசு தருவார் வெற்றி தருவார்
உன் வாழ்வில் நிச்சயமே
இயேசு தருவார் வெற்றி தருவார்
நம் வாழ்வில் நிச்சயமே
வருகின்ற நாட்களை ஆசீர்வதிப்பீர்
வெற்றியின் வழியாய் நடத்திடுவீர் (2) – என்
கிறிஸ்துவின் அன்பை விட்டென்னை பிரிப்பவன் யார்
இயேசுவின் அன்பை விட்டென்னை பிரிப்பது எது (2)
ஆராதனை அன்பே உமக்கு தானே…
ஆராதனை என் நேசர் இயேசுவுக்கே…
போராட்டம் வந்தாலும் உம்மை விட மாட்டேன்
தோல்விகள் நேர்ந்தாலும் உம் பெலத்தில் ஜெயிப்பேன்
தேவைகள் நெருக்கினாலும் உம் கரத்தை பார்ப்பேன்
பெலவினம் சூழ்ந்தாலும் உம் கிருபை கேட்பேன்.
நீரே எந்தன் நம்பிக்கை உம் வலக்கரம் என்னை தாங்குதே
நான் நம்பும் கன்மலை எனக்கு அடைக்கலம் நீர் தானே
உம் அன்பு எனக்கு போதுமே
ஆராதனை அன்பே உமக்கு தானே…
ஆராதனை என் நேசர் இயேசுவுக்கே…
தாழ்ந்து நான் போனாலும் துவண்டு போகமாட்டேன்
உயர்வுகள் தந்தாலும் உம் கரத்தில் இருப்பேன்
வெறுமைகள் உணர்ந்தாலும் உம் நிறைவில் மகிழ்வேன்
எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் ஓடிங்கி போகமாட்டேன்
எனக்காய் ஜீவன் விட்டவரே உம்மை எப்படி மறப்பேன்
வாழ்நாள் எல்லாம் உம் அன்பை பாடி பாடித் துதிப்பேன்
என்றும் என்றென்றும் பிரியமட்டேனே.