Neer Ennai Vittu Poonal
நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும்
நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2
தனியே நான் நின்றிடுவேன்
துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2
நீர் வேண்டும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2
1. புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2
வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன்
வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 – (தனியே நான்)
2. கண்ணீராலே என் கண்கள் கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம் கணக்கில் வைத்துள்ளீர் – 2
துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்-2
துணையாளரே உம்மை துதித்திடுவேன் – (தனியே நான்)
3. வேதனையால் என் உள்ளம் உடைந்து போனாலும்
வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்
சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும்
சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் – 2
(நீர் என்னை)
நீர் என்னோடு வரவேண்டும்
நான் உம்மோடு வாழ வேண்டும் – 2
நீர் போதும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் எந்நாளிலுமே – 2
நீர் என்னை விட்டு போனால்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே
1. கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
புது நன்மைகள் உன்னை சேரும்
2. மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்
கேடகம் கன்மலை
தஞ்சம் துருகம் தயாபரர்
சிநேகிதன் பரிசுத்தர்
வாசல் மேய்ப்பர் உத்தமர்
மகா பிரதான ஆசாரியர்
எல்லாவற்றிலும் சிறந்தவர்
நித்திய இரட்சிப்பின் காரணர்
ராஜாக்களுக்கெல்லாம் ராஜா
அப்பா அப்பா உம் நாமங்கள்
எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட
கோடி யுகங்கள் போதாதே
நீதியின் சூரியன்
சத்திய ஆவி யானவர்
படைகளின் ஆண்டவர்
அக்கினி மய மானவர்
மரித்தோரில் முதல் பிறந்தவர்
சமாதானத்தின் தேவன் அவர்
ஜாதிகளை ஆளுபவர்
கர்த்தாதி கர்த்தராம் யெகோவா
நாயகன் மணவாளன்
மீட்பர் ஈஷி அதிசயம்
பூரணர் போதகர்
ஆதி அந்தம் ஆலயம்
சர்வத்திற்கும் மேலானவர்
சதாகாலமும் இருக்கின்றவர்
உன்னதத்தில் உயர்ந்தவர்
இயேசு கிறிஸ்து என்னும் மேசியா
Kedagam Kanmalai
Thanjam Thurugam Thayaparar
Senekithar Parisuthar
Vaasal Meipar Uthamar
Maga Prathana Aasariyar
Ellavattilum Siranthavar
Nithiya Ratchippin Kaaranar
Raajakalukellam Raja
Azhaithavar Unnai Nadathiduvar
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடாமல் (புதிய ஆண்டில்) உன்னை உயர்த்திடுவார்
உன் குறைகளை கண்டு கைவிடுவதில்லை
உன் மீறுதலை கண்டு உன்னை
வெறுக்க வில்லை
தடுமாறும் நேரம் தாங்கினாரே
அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
அழைத்தவர் என்றும் மறப்பதில்லை – அழைத்தவர் உன்னை
1. சாம்பலை சிங்காரமாய்
மாற்றிடும் தெய்வம் உன்னையும்
புது ஆண்டில் நிச்சயம் உயர்த்திடுவார் – 2
கண்ணீரும் போதும்
உன் கவலையும் போதும்
என் இயேசு இருக்கின்றார்
உன்னை கரை சேர்த்திடுவார் – அழைத்தவர் உன்னை
2. துன்பத்தை கண்ட வருடத்திற்கு ( நாட்களுக்கு )நிகராக
ஷேமத்தை தந்து நிச்சயம் நடத்திடுவார்
அழுதது போதும் உன் புலம்பலும் போதும்
என் இயேசு இருக்கிறார்
உன்னை கரை சேர்த்திடுவார் – அழைத்தவர் உன்னை