Yesu Nesikkiraar – இயேசு நேசிக்கிறார்

Yesu Nesikkiraar
இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார்
இயேசு என்னையும் நேசிக்க
யான் செய்ததென்ன மா தவமோ!

1. நீசனாமெனைத்தான்
இயேசு நேசிக்கிறார்
மாசில்லாத பரன் சுதன்தன் முழு
மனதால் நேசிக்கிறார்

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்
நரராமீனரை நேசிக்கிறாரென
நவிலல் ஆச்சரியம்

3. நாதனை மறந்து
நாட்கழித்துலைந்தும்
நீதன் இயேசெனை
நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம்

4. ஆசை இயேசுவென்னை
அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைந்தவர்
அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன்

5. ராசன் இயேசுவின் மேல்
இன்ப கீதஞ் சொலில்,
ஈசன் இயேசெனைத்
தானேசித்தாரென்ற

இணையில் கீதஞ் சொல்வேன்!

Unnmaiyaai Thammai Nooki – உண்மையாய் தம்மை நோக்கி

Unnmaiyaai Thammai Nooki

உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

1. தானியேல் சிங்ககெபியில்,
மூவர் எரியும் தழலில் –
நம்பினார்கள் தேவன் விடுவித்தாரே
இன்றைக்கும் தேவன் விடுவிப்பாரே

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

2. அன்னாளின் துக்கத்தையும்,
ஆகாரின் கண்ணீரையும் –
பார்த்தாரே தேவன் பதில் தந்தாரே
இன்றைக்கும் தேவன் பதில் தருவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

3. விலகாத வியாதிகளும்,
மாறாத சூழ்நிலையும் –
வார்த்தையினால் தேவன் மாற்றினாரே
இன்றைக்கும் தேவன் மாற்றிடுவார்

– உண்மையாய் தம்மை நோக்கி
கூப்பிடும் யாவருக்கும்

பதில் தருவார்
சுகம் தருவார்
கண்ணீர் துடைப்பார்
நம் தேவன்

Naan Paadumpothu – நான் பாடும் போது

Naan Paadumpothu
நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா (சங் 71:23)
அக்களித்து அகமகிழும்

1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் (சங் 71:14)
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது

நாள்தோறும் உம்மை துதிப்பேன் (சங் 71:14)
நம்பிக்கையோடு துதிப்பேன்

2. எப்போதும் நான் தேடும் (சங் 71:3)
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே

3. கருவறையில் இருக்கும் போது (சங் 71:6)
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்

4. இளமை முதல் இதுவரையில் (சங் 71:5)
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்

5. முதிர்வயது ஆனாலும் (சங் 71:9)
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே

Neer Ennai Vittu Poonal – நீர் என்னை விட்டு போனால்

Neer Ennai Vittu Poonal
நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும்
நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் – 2

தனியே நான் நின்றிடுவேன்
துணையில்லாமல் நான் சென்றிடுவேன் – 2
நீர் வேண்டும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் என் எந்நாளினுமே – 2

1. புல்லைப்போலே மறைந்து போகும் மனிதனுக்காய் வர்ணணையாய் கவிதை எழுதுகிறான் – 2
வருஷம் தோறும் உன்னை வழி நடத்தும் தேவன்
வருடாமலே உன்னை நடத்திடுவார் – 2 – (தனியே நான்)

2. கண்ணீராலே என் கண்கள் கலங்கி போனாலும் கண்ணீரெல்லாம் கணக்கில் வைத்துள்ளீர் – 2
துன்பமெல்லாம் இன்பமாய் மாற்றிடும்-2
துணையாளரே உம்மை துதித்திடுவேன் – (தனியே நான்)

3. வேதனையால் என் உள்ளம் உடைந்து போனாலும்
வேதத்தாலே என் காயம் ஆற்றுகிறீர்
சோதனையெல்லாம் சாதனையாய் மாற்றிடும்
சேனைகளின் தேவனே ஸ்தோத்தரிப்பேன் – 2
(நீர் என்னை)

நீர் என்னோடு வரவேண்டும்
நான் உம்மோடு வாழ வேண்டும் – 2
நீர் போதும் என் வாழ்வினிலே
நீர் வேண்டும் எந்நாளிலுமே – 2
நீர் என்னை விட்டு போனால்

Jeeva Naalellam Nanmaiyum – ஜீவ நாளொல்லாம் நன்மையும்

Jeeva Naalellam Nanmaiyum
ஜீவ நாளொல்லாம் நன்மையும் கிருபையும் தொடரும் என்னை தொடரும்
என் வாழ்நாள் முழுவதும்
உம் கோலும் தடியுமே
தேற்றும் என்னை தேற்றும்

நம்பிக்கை நீரய்யா
என் நங்குறம் நீரய்யா
நான் தங்கும் வாசஸ்தலமே

1. நீர் கால்கள் ஓரமாய் நடப்பட்ட மரமாய்
கனிகள் தந்திடுவேன்
இலையுதிர மரம் நானே
நேசர்க்கு கனி கொடுப்பேன்

2. விண்ணப்பம் கேட்டு
கண்ணிரை துடைத்து
ஆறுதல் அளிப்பவரே
வேண்டினதை தருவாரே
வரப்போகும் என் ராஜவே

Indam Kollamal Perugaseiyum – இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் – Seerpaduthuvaar

Indam Kollamal Perugaseiyum

இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
உன்னை இல்லாமல் செய்வேன் என்று சொன்னோர் முன்
இடம் கொள்ளாமல் பெருகச்செய்யும் தேவன்
நேராகும் வாய்ப்பில்லா உன் வாழ்வை
சீராக மாற்றிட வருவாரே

சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை சீர்படுத்துவார் ஸ்திரப்படுத்துவார் பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்
உன்னை பெலப்படுத்தி நிலைநிறுத்துவார்

1. கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
கொஞ்சகாலம் கண்ட பாடுகள் எல்லாமே
பனிபோல உந்தன் முன்னே உருகிப்போகும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
உன் கஷ்டங்கள் நஷ்டங்கள் எல்லாமே மாறும்
புது நன்மைகள் உன்னை சேரும்

2. மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
மேன்மையை தடுக்க நின்ற கூட்டங்கள் எல்லாமே
தேவன் உன் கூட என்று வணங்கி நிற்கும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உனை பகைத்தவர் தந்திட்ட காயங்கள் மாறும்
உன் மேன்மை உன் கையில் சேரும்

 

Nandri Baligal Seluthiye Naangal – நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்

Nandri Baligal Seluthiye Naangal
நன்றி பலிகள் செலுத்தியே நாங்கள்
ஆலயம் கூடி வந்தோம்
துதி பலிகள் செலுத்தியே நாங்கள்
உம்மை போற்ற வந்தோம் (2)

கர்த்தர் செய்த நன்மைக்காக
நன்றி செலுத்த வந்தோம்
நம்மை மறவா அவர் கிருபை
எண்ணியே துதிக்க வந்தோம்

1. உடன்படிக்கை எனக்குத் தந்து
உந்தனின் பிள்ளையாய் தெரிந்தெடுத்தீர்
மரணத்தின் விளிம்பில் நின்ற என்னை
ஜீவனின் பாதையில் திருப்பி விட்டீர்

2. வாதைகள் என்னை சூழ்ந்தபோது
செட்டைகளாலே எனை மறைத்தீர்
பாதைகள் எல்லாம் காக்கும்படி
தூதர்கள் அனுப்பி உதவி செய்தீர்

3. தேவைகள் நெருக்கி நின்றபோது
அற்புதமாகப் பெருக வைத்தீர்
கண்ணீரின் பாதையில் திகைத்தபோது
கண்மணியே என்று என்னை அழைத்தீர்

Kedagam Kanmalai – கேடகம் கன்மலை – Um Naamangal

Kedagam Kanmalai

கேடகம் கன்மலை
தஞ்சம் துருகம் தயாபரர்
சிநேகிதன் பரிசுத்தர்
வாசல் மேய்ப்பர் உத்தமர்
மகா பிரதான ஆசாரியர்
எல்லாவற்றிலும் சிறந்தவர்
நித்திய இரட்சிப்பின் காரணர்
ராஜாக்களுக்கெல்லாம் ராஜா

அப்பா அப்பா உம் நாமங்கள்
எத்தனை எத்தனை ஆயிரம்
சொல்லி சொல்லி நான் பாடிட
கோடி யுகங்கள் போதாதே

நீதியின் சூரியன்
சத்திய ஆவி யானவர்
படைகளின் ஆண்டவர்
அக்கினி மய மானவர்
மரித்தோரில் முதல் பிறந்தவர்
சமாதானத்தின் தேவன் அவர்
ஜாதிகளை ஆளுபவர்
கர்த்தாதி கர்த்தராம் யெகோவா

நாயகன் மணவாளன்
மீட்பர் ஈஷி அதிசயம்
பூரணர் போதகர்
ஆதி அந்தம் ஆலயம்
சர்வத்திற்கும் மேலானவர்
சதாகாலமும் இருக்கின்றவர்
உன்னதத்தில் உயர்ந்தவர்
இயேசு கிறிஸ்து என்னும் மேசியா

Kedagam Kanmalai
Thanjam Thurugam Thayaparar
Senekithar Parisuthar
Vaasal Meipar Uthamar
Maga Prathana Aasariyar
Ellavattilum Siranthavar
Nithiya Ratchippin Kaaranar
Raajakalukellam Raja

Appa Appa um naamangal
Ethanai Ethanai aayiram
Solli Solli Naan Paadida
Kodi Yugankal Pothathe

Neethyin Sooriyan
Satthiya aaviyaanavar
Padaikalin aandavar
Akkinimayamaanavar
Marithoril Muthal Piranthavar
Samathanathin Devan Avar
Jaathikalai Aalupavar
Karthaathi Kartharaam Yehova

Naayagan Manavaalan
Meetpar Eshi Athisayam
Pooranar Pothagar
Aathi Antham Aalayam
Sarvathirkkum Melanavar
Sathakaalamum Irukintravar
Unnathathil Uyarnthavar
Yesu Kirsthu Ennum Messiah

Azhaithavar Unnai Nadathiduvar | அழைத்தவர் உன்னை நடத்திடுவார்

Azhaithavar Unnai Nadathiduvar
அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடாமல் (புதிய ஆண்டில்) உன்னை உயர்த்திடுவார்
உன் குறைகளை கண்டு கைவிடுவதில்லை
உன் மீறுதலை கண்டு உன்னை
வெறுக்க வில்லை
தடுமாறும் நேரம் தாங்கினாரே
அழைத்தவர் உன்னை மறக்கவில்லை
அழைத்தவர் என்றும் மறப்பதில்லை – அழைத்தவர் உன்னை

1. சாம்பலை சிங்காரமாய்
மாற்றிடும் தெய்வம் உன்னையும்
புது ஆண்டில் நிச்சயம் உயர்த்திடுவார் – 2
கண்ணீரும் போதும்
உன் கவலையும் போதும்
என் இயேசு இருக்கின்றார்
உன்னை கரை சேர்த்திடுவார் – அழைத்தவர் உன்னை

2. துன்பத்தை கண்ட வருடத்திற்கு ( நாட்களுக்கு )நிகராக
ஷேமத்தை தந்து நிச்சயம் நடத்திடுவார்
அழுதது போதும் உன் புலம்பலும் போதும்
என் இயேசு இருக்கிறார்
உன்னை கரை சேர்த்திடுவார் – அழைத்தவர் உன்னை

Azhaithavar Unnai Nadathiduvaar
Pudhiya Aandil Unnai Uyarthiduvaar
Un Kuraigalai Kandu Kaividuvadhillai
Un Meerudhalai Kandu
Unnai Verukkavillai
Thadumaarum Naeram Thaanginaarae
Azhaithavar unnai Marakkavillai
Azhaithavar Endrum Marappadhillai
– Azhaithavar Unnai

1. Saambalai Singaaramaai
Maattridum Deivam
Unnaium Pudhu Aandil
Nitchayam
Uyarthiduvaar-2
Kanneerum Podhum
Un Kavalaium Podhum
En Yesu Irukkindraar
Unnai karai Saerthiduvaar
– Azhaithavar Unnai

2. Thunbathai Kanda
Varudathirku (Naatkaluku) Nigaraaga Shaemathai Thandhu
Nitchayam Nadathiduvaar
Azhudhadhu Podhum
Un Pulambalum Podhum
En Yesu Irukkindraar
Unnai Karai Saerthiduvaar
– Azhaithavar Unnai

Yesuvae Um Arukinilae – இயேசுவே உம் அருகினிலே

Yesuvae Um Arukinilae
இயேசுவே உம் அருகினிலே
ஆவலாய் வருகின்றேன்
எந்நேரமும் எந்தன் சுவாசம்
உம்மையே துதித்திடுமே
எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
உந்தன் மகிமையைப் பாடிடுமே
இயேசுவே… இயேசுவே…

Yesuvae Um Arukinilae
Aavalaai Varukinten
Ennaeramum Enthan Suvaasam
Ummaiyae Thuthithidumae
Ennaalumae Enthan Vaalkai
Unthan Makimaiyai Paadidumae
Yesuvae… Yesuvae…